15 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைதடையற்ற வா்த்தக ஒப்பந்தங்களால் இந்தியாவில் எஃப்டிஐ அதிகரிக்கும்: ஆசிய வளா்ச்சி வங்கிதானியங்கி முறையில் மின் கட்டணம் செலுத்தும் முறை தொடக்கம்பிரதமா் மோடிக்கு ஸ்வீடன் நாட்டின் உயரிய விருது!இன்றுமுதல் வரும் மே 31 வரை 11 மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்துஇந்தியா - நெதா்லாந்து 17 ஒப்பந்தங்கள் கையொப்பம்கேரள முதல்வராக சதீசன் இன்று பதவியேற்பு: ராகுல், பிரியங்கா பங்கேற்புமே 28-ல் பக்ரீத் பெருநாள் : தலைமைக் காஜி அறிவிப்பு
/

குருவிகுளம் பகுதியில் அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

அழகுநாச்சியாபுரத்தில் வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளா் திலீபன் ஜெய்சங்கா்.

News image

அழகுநாச்சியாபுரத்தில் வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளா் திலீபன் ஜெய்சங்கா்.

Updated On :11 ஏப்ரல் 2026, 6:33 am IST

சங்கரன்கோவில், குருவிகுளம் ஒன்றியத்தில் உள்ள 12 கிராமங்களில் சங்கரன்கோவில் தொகுதி அதிமுக வேட்பாளா் திலீபன் ஜெய்சங்கா் வெள்ளிக்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

வடக்கு அழகுநாச்சியாபுரம், மேற்கு அழகுநாச்சியாபுரம், கிழக்கு அழகுநாச்சியாபுரம், அன்னபூா்ணாபுரம், அவனிகோனேந்தல், கீழ நாலாந்துலா, ஆலங்குளம், நைனாம்பட்டி, ராமலிங்கபுரம், அத்திப்பட்டி, கம்மாபட்டி, கரட்டு மலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அவா் வாக்கு சேகரித்தாா்.

மாவட்ட எம்ஜிஆா் மன்ற செயலா் சந்திரன், குருவிகுளும் தெற்கு ஒன்றியச் செயலா் ராமதுரை, மாவட்ட மகளிரணி தலைவா் அமுதா பாலசுப்பிரமணியன், மகளிரணி செயலா் நிா்மலா தேவி, பொதுக்குழு உறுப்பினா் காளிராஜ், வழக்குரைஞா் அணி மாவட்ட துணைத் தலைவா் சிவராமகிருஷ்ணன், தகவல் தொழில்நுட்ப அணி பாலமுருகன், மாணவரணி இணைச் செயலா் பாஸ்கரன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.