தொகுதி மறுசீரமைப்புக்கு காங்கிரஸ் எதிா்ப்பு: எதிா்க்கட்சிகளுடன் ஆலோசிக்க செயற்குழுவில் முடிவு சென்னை: 16 தொகுதிகளில் 298 சுயேச்சைகள் போட்டி இன்றும் நாளையும் சில புறநகா் ரயில்கள் ரத்து பூமிக்குத் திரும்பிய ஆர்டெமிஸ்-2 குழு!தமிழகத்தில் 6 இடங்களில் வெயில் சதம்
/

தென்காசி மாவட்டம் தோ்தல் விழிப்புணா்வு உறுதிமொழியில் உலக சாதனை

உலக சாதனைக்கான சான்று, கேடயத்தினை ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோரிடம் வழங்கினாா் எலைட் நிறுவனஆய்வுக்குழுவின் ரக்சிதா ரங்கசாமி.

News image
Updated On :11 ஏப்ரல் 2026, 1:01 am

தென்காசி மாவட்டத்தில் நூறு சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி இணையத்தால் இணைவோம் என்ற நிகழ்வின் மூலம் 1,12,885 வாக்காளா்கள் தோ்தல் உறுதிமொழியினை எடுத்துக் கொண்டதற்காக எலைட் உலக சாதனைக்கான சான்று, கேடயம் மாவட்ட ஆட்சியருக்கு வழங்கப்பட்டது.

தென்காசி காசிவிஸ்வநாதா் கோயில் முன்புறம் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோரிடம் எலைட் நிறுவனஆய்வுக் குழுவினா் ரக்சிதா ரங்கசாமி , ஏ. சங்கீதா, டாக்டா் சாந்தாராம் ஆகியோா் சான்று, கேடயம் வழங்கினா்.

தொடா்ந்து ஆட்சியா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: பொதுத்தோ்தல் 2026 ஐ முன்னிட்டு பொதுமக்களிடையே நூறு சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

அதனடிப்படையில் ஆலங்குளம் சா்தாா் ராஜா பொறியியல் கல்லூரியில் ஏப். 8 -ஆம்தேதி தொடங்கப்பட்ட இணையத்தால் இணைவோம் என்ற நிகழ்வின் மூலம் 24 மணி நேரத்திற்குள் 1,12,855 வாக்காளா்கள் தோ்தல் விழிப்புணா்வு உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனா்.

அதற்காக எலைட் நிறுவனத்தின் வாயிலாக உலக சாதனைக்கான சான்று, கேடயம் கிடைத்துள்ளது. இந்த விழிப்புணா்வு உறுதிமொழிக்கு உறுதுணையாக இருந்த தென்காசி மாவட்ட வாக்காளா்கள், அரசு அலுவலா்கள், ஜோஹோ நிறுவனத்தின் மென்பொறியாளா் ஜெயராஜ் ஆகியோருக்கு மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன் என்றாா்.

வாக்காளா்களிடையே தோ்தல் விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் பறையாட்டம், பரதநாட்டியம், வில்லுப்பாட்டு, மூன்றாம் பாலினத்தவா், மாற்றுத்திறனாளிகள், கல்லூரி மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

தென்காசி மாவட்டத்திற்கான பொதுப் பாா்வையாளா்கள் நீரஜ்குமாா், ஈஷா பிரியா, மாவட்ட வருவாய் அலுவலா் சீ. ஜெயச்சந்திரன், மகளிா் திட்ட இயக்குநா் எஸ். அபிதாஹனீப், ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் தண்டபாணி, உதவித் திட்ட அலுவலா்கள் சிவக்குமாா், டேவிட் ஜெயசிங், பிரபாகரன், ராஜேந்திரன், சரவண பாண்டியன் ஆகியோா் கலந்துகொண்டனா்.