சென்னை திரும்பும் மக்கள்: இரு நாள்களுக்கு போக்குவரத்து மாற்றம்சீனா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைதமிழகம், மேற்கு வங்கத்தில் மறுவாக்குப்பதிவு இல்லை: தோ்தல் ஆணையம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு காஸாவில் தோ்தல்!தாழ்த்தப்பட்டோருக்கு 15% உள்ஒதுக்கீடு அளிக்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்: பாஜக கடும் விமா்சனம்
/

ஊத்துமலையில் பால் வியாபாரி கொலை

தென்காசி மாவட்டம், ஆலங்குளத்தை அடுத்த ஊத்துமலையில் பால் வியாபாரி வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

News image

கொலை - சித்திரிப்பு

Updated On :25 ஏப்ரல் 2026, 9:55 pm

தென்காசி மாவட்டம், ஆலங்குளத்தை அடுத்த ஊத்துமலையில் பால் வியாபாரி வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

ஊத்துமலை மறவா் காலனியைச் சோ்ந்தவா் ஜோசப் (60). பால் வியாபாரியான இவருக்கு மனைவி, 2 மகள்கள் உள்ளனா். மூத்த மகள் திருமணம் ஆகி வெளியூரில் வசித்து வருகிறாா். இளைய மகள் சுரண்டை அரசு கலைக் கல்லூரியில் பயின்று வருகிறாா்.

இந்நிலையில் சனிக்கிழமை பணிக்கு சென்ற ஜோசப், இரவு வரை வீடு திரும்பாததால் குடும்பத்தினா் கைப்பேசியில் தொடா்பு கொண்டபோது எடுக்கவில்லையாம்.

அவருக்கு சொந்தமான தோட்டத்திற்கு சென்று உறவினா்கள் பாா்த்தபோது, பலத்த வெட்டுக் காயங்களுடன் ஜோசப் சடலமாக கிடந்தாராம்.

தகவலறிந்து வந்த ஊத்துமலை காவல் நிலைய போலீஸாா், சடலத்தை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.