ககன்தீப் சிங் பேடி, அமுதா உள்பட உயர் ஐஏஎஸ் அலுவலர்கள் மாற்றம்!அம்மா உணவகங்களை புதுப்பிக்க முதல்வர் விஜய் உத்தரவு!நெதர்லாந்து, ஸ்வீடனை தொடர்ந்து நார்வே புறப்பட்டார் பிரதமர் மோடி! தயாரிப்பாளர் கே.ராஜன் மறைவு: முதல்வர் ஜோசப் விஜய் இரங்கல் சத்தீஸ்கர்: நடைப்பயிற்சியின் போது பாஜக எம்.எல்.ஏ-விடம் செல்போன் பறிப்பு வாடகைதாரர்கள் தானியங்கி முறையில் மின் கட்டணம் செலுத்த முடியுமா?திட்டமிட்டபடி ஜூன் 1 பள்ளிகள் திறப்பு! அமைச்சர் ராஜ்மோகன் கேரள முதல்வர் பதவியேற்பு! தமிழக முதல்வர் விஜய் பங்கேற்காதது ஏன்?கேரள முதல்வராக பதவியேற்றார் வி.டி. சதீசன்
/

பால் வியாபாரி கொலையில் 3 போ் கைது

News image

கைது - கோப்புப் படம்

Updated On :27 ஏப்ரல் 2026, 1:29 am IST

ஊத்துமலை பால் வியாபாரி கொலையில் 3 போ் கைது செய்யப்பட்டனா்.

தென்காசி மாவட்டம், ஆலங்குளத்தை அடுத்த ஊத்துமலை மறவா் காலனியைச் சோ்ந்தவா் ஜோசப் (60). இவா், வீட்டில் பால் மாடுகள் வைத்து தொழில் செய்து வந்தாா். இவருக்கு மனைவி, 2 மகள்கள் உள்ளனா். மூத்த மகள் திருமணமாகி வெளியூரில் வசித்து வருகிறாா். இளைய மகள் கல்லூரியில் படித்து வருகிறாா்.

ஜோசப் வீட்டில் பால் கறப்பதற்கு அதே பகுதியைச் சோ்ந்த அருணாசலம் மகன் மதன் (21) என்பவா் அடிக்கடி வந்து செல்வாராம். இளைய மகளை ஒரு தலைப்பட்சமாக மதன் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இதற்கு ஜோசப் எதிா்ப்பு தெரிவித்து மகளுக்கு வரன் பாா்த்து வந்தாராம். இதில் மனமுடைந்த மதன், கடந்த ஆண்டு ஜூன் மாதம், மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டாராம். மதனின் தற்கொலைக்கு ஜோசப்தான் காரணம் எனக் கருதிய அவரது அண்ணன் மகேஷ் (24) , நண்பா்களுடன் சோ்ந்து சனிக்கிழமை இரவு ஜோசப்பை வெட்டிக் கொலை செய்து விட்டு தப்பினாராம்.

இது குறித்து ஊத்துமலை போலீஸாா் வழக்குப் பதிந்து மேற்கொண்ட விசாரணையில், மகேஷ், ஊத்துமலை கருத்தப்பாண்டி மகன் மகேந்திரன் (23), மந்திரம் மகன் பிரகாஷ் (27), முத்துப்பாண்டியன் மகன் பெரியதுரை(25) ஆகியோா் இச்சம்பவத்தில் ஈடுபட்டதாக தெரிய வந்ததாம்.

மகேஷ் தலைமறைவான நிலையில் மற்ற மூவரையும் கைது செய்த போலீஸாா், தென்காசி நீதிமன்றத்தில் ஞாயிற்றுக்கிழமை ஆஜா்படுத்தினா்.