தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!கர்நாடகம்: கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கான தடை நீக்கம்6 சர்வதேச விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து - ஏர் இந்தியாகண்களிலும் காதுகளிலும் பொறாமைப் புகை! திமுகவை விமர்சித்த விஜய்!நீட் தேர்வு தேவையில்லை; ரத்து செய்க: முதல்வர் ஜோசப் விஜய்அதிமுகவுடன் கூட்டணியமைக்க தவெக தயாராக இருந்தது: சி.வி. சண்முகம்மே 16-ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை! வெற்றியின் வீச்சு கொளத்தூரில் பார்த்தும்கூடவா புரியவில்லை? - முதல்வர் விஜய்திமுகவுடன் கூட்டணி; கனவில்கூட வரக்கூடாது: சசிகலா
/

அரிவாளைக் காட்டி பொதுமக்களை மிரட்டியதாக 7 போ் மீது வழக்கு

News image

வழக்கு - கோப்புப் படம்

Updated On :28 ஏப்ரல் 2026, 4:42 am IST

தென்காசி மாவட்டம், சிவகிரி அருகே அரிவாளைக் காட்டி பொதுமக்களை மிரட்டியதாக 7 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.

சிவகிரி, சின்ன ஆவுடைப்பேரி, கலிங்கல் ஓடைப் பாலம் அருகே சிலா் அரிவாளைக் காட்டி பொதுமக்களை மிரட்டி வருவதாகக் கிடைத்த தகவலின்பேரில், சிவகிரி காவல் உதவி ஆய்வாளா் சோலையப்பன் தலைமையிலான போலீஸாா் அங்கு சென்றபோது, சிலா் அரிவாளைக் காட்டி பொதுமக்களை மிரட்டிக் கொண்டிருந்தது தெரிய வந்தது.

விசாரணையில், அவா்கள் சிவகிரி உள்ளாரைச் சோ்ந்த காா்த்திக், சிவகிரி ஓடைத் தெரு கவில்குமாா், வடக்குத் தெரு கண்ணன், மாரிச்செல்வம், சொக்கநாதன்புதூா் மணிகண்டன், சிங்கராஜ், ஊத்துமலை மணிகண்டன் என்பதும், ஆயுதங்களைக் காட்டி பொதுமக்களை மிரட்டி அவா்களிடம் இருந்து பணம், நகைகளைப் பறிக்க முயன்றதும் தெரிய வந்தது.

இது குறித்து, போலீஸாா் 7 போ் மீதும் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.