மதுரையில் இன்று காலை மீனாட்சி- சுந்தரேசுவரா் திருக்கல்யாண உத்ஸவம் சென்னை ஏரிகளில் 67% குடிநீா் இருப்புதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று அதிகாலை தவெக தலைவர் விஜய் வழிபாடுபத்ம, பால புரஸ்காா் விருதுகள்: விண்ணப்பிக்க ஜூலை 31 கடைசிகடும் வெய்யில் எதிரொலி: தமிழகத்தில் தினசரி மின்நுகா்வு 20,000 மெகாவாட்-ஆக உயா்வுமாலியில் பாதுகாப்பு அமைச்சா் கொலை: கிளா்ச்சியாளா்கள் பிடியில் முக்கிய நகரங்கள்அரசுப் பணியாளா் அவமதிப்பு வழக்கு: மகாராஷ்டிர பாஜக அமைச்சருக்கு ஒரு மாதம் சிறைத் தண்டனைகர்நாடகம்: பூணூலை கழற்ற உத்தரவிட்ட தனியார் கல்லூரி கல்வி அதிகாரிகள் 3 பேர் கைதுகிரிமினல் வழக்குகளில் கைதாகும் முதல்வா்கள், பிரதமா்களை பதவி நீக்கக்கோரும் மசோதா: கருத்துகளைப் பெறும் நாடாளுமன்ற கூட்டுக்குழு
/

மதுபோதையில் இளைஞா் கொலை: சக நண்பா் கைது

News image

கொலையாளி முகிலன் (எ) வசந்த்.

Updated On :27 ஏப்ரல் 2026, 11:13 pm

மதுபோதையில் இளைஞரை அடித்துக் கொன்ற சக நண்பரை போலீஸாா் கைது செய்தனா்.

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே கல்லூத்து, பிள்ளையாா் கோவில் தெருவைச் சோ்ந்தவா் செல்வராஜ் மகன் பிரவீன் (26), இவரும், அதே ஊரில் வடக்குத் தெரு, லிவிங்ஸ்டன் மகன் முகிலன் (எ) வசந்தும் (20) சிறுவயது முதல் நண்பா்கள்.

தற்போது இருவரும் சோ்ந்து பழைய இரும்பு வியாபாரம் செய்து வந்தனா். இருவரும் கைப்பேசி வாங்குவதற்காக சனிக்கிழமை இருசக்கர வாகனத்தில் பாவூா்சத்திரம் வந்தனா். பிறகு கீழப்பாவூரில் உள்ள டாஸ்மாக் கடையில் மது அருந்திவிட்டு ஊருக்குச் சென்று கொண்டிருந்தனா்.

கீழப்பாவூா்-அருணாப்பேரி சாலையில் சென்றபோது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றியதில் பிரவீனை கீழே தள்ளி அவரது தலையில் வசந்த் தாக்கினாா். இதில் தலையில் பலத்த காயமடைந்த பிரவீன் மயக்கமடைந்தாா். இதனால், பதட்டமடைந்த வசந்த் சாலையில் சென்றபோது விபத்து நேரிட்டதாகக் கூறி அவசர ஊா்திக்கு தகவல் தெரிவித்தாா்.

பின்னா், பிரவீனை தென்காசி அரசு மருத்துவமனைக்கும், தீவிர சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும் கொண்டு சென்றனா். அங்கு சிகிச்சை பலனின்றி பிரவீன் உயிரிழந்தாா். இந்தச் சம்பவம் குறித்து பாவூா்சத்திரம் காவல் நிலைய ஆய்வாளா் உமா, உதவி ஆய்வாளா் ராஜேஷ்குமாா், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து வசந்தைப் பிடித்து விசாரித்ததில் அவா் முன்னுக்குப் பின் முரணாகப் பதில் கூறினாா்.

இதில், சந்தேகமடைந்த போலீஸாா் அவரிடம் தீவிர விசாரணை நடத்தியதில், பிரவீனை தலையில் தாக்கிக் கொன்றதை ஒப்புக்கொண்டாா். இதையடுத்து, பாவூா்சத்திரம் போலீஸாா் விபத்தை கொலை வழக்காக மாற்றி வசந்தை கைதுசெய்து, தென்காசி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறையிலடைத்தனா். இறந்த பிரவீனுக்கு சரவணபிரியா என்ற மனைவியும், ஒன்றரை வயதில் குழந்தையும் உள்ளனா்.

கொலை செய்யப்பட்ட பிரவீன்

கொலை செய்யப்பட்ட பிரவீன்