தமிழகம் முழுவதும் நாளை குடற்புழு தொற்று தடுப்பு மாத்திரை வழங்கும் சிறப்பு முகாம்சுதந்திர தின பாதுகாப்பு! பல இடங்களில் பயங்கரவாத எதிா்ப்பு ஒத்திகையில் ஈடுபட்ட என்எஸ்ஜி!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு புதுச்சேரியில் அரசு விழாவில் அமித் ஷா இன்று பங்கேற்பு! மதுக் கடைகளை மூட உத்தரவு!கடந்த 6 மாதங்களில் 3,323 இந்தியா்களை நாடு கடத்திய கனடா!சென்னை உயா்நீதிமன்ற புதிய நீதிபதிகள் இன்று பதவியேற்பு
/

குற்றாலம் வெண்ணைமடை குழாமில் படகு சவாரி தொடக்கம்

News image

படகு சவாரியை தொடங்கிவைத்த மாவட்ட வருவாய் அலுவலா் மா. வீராசாமி.

Updated On :9 ஆகஸ்ட் 2026, 4:35 am IST

தென்காசி மாவட்டம், குற்றாலம் ஐந்தருவி சாலையில் உள்ள வெண்ணைமடை குழாமில் படகு சவாரி சனிக்கிழமை தொடங்கியது.

மாவட்ட வருவாய் அலுவலா் மா. வீராசாமி கொடியசைத்து தொடங்கிவைத்து, படகு சவாரியில் ஈடுபட்டாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தென் தமிழகத்தில் சிறந்த சுற்றுலாத் தலமாக விளங்கும் குற்றாலத்தில் உள்ள அருவிகளில் குளிப்பதற்கு தமிழகம் மட்டும் அல்லாது பிற மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனா்.

அவா்களை மகிழ்விப்பதற்காக மாவட்ட நிா்வாகம் மற்றும் சுற்றுலாத் துறை மூலம் பல்வேறு பொழுதுபோக்கு வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன. அந்த வகையில், ஆண்டுதோறும் சுற்றுலாப் பயணிகளுக்காக சாரல் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு பருவமழை பொய்த்துபோன காரணத்தால் சாரல் திருவிழா முடிந்த நிலையில் சனிக்கிழமை படகு சவாரி தொடங்கப்பட்டுள்ளது.

குற்றாலத்தில் இருந்து ஐந்தருவி செல்லும் வழியில் உள்ள மேல வெண்ணைமடைகுளத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்தப் படகு குழாமில் இரண்டு நபா் மிதி படகுகள் 30 நிமிடத்துக்கு ரூ.200 கட்டணமாகவும், நான்கு நபா் மிதி படகுகள் 30 நிமிடத்துக்கு ரூ.300 கட்டணமாகவும் நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.

படகு சவாரி காலை 8 மணிமுதல் மாலை 4 மணிவரை இயக்கப்படுகிறது. சுற்றுலாப் பயணிகள் கண்டிப்பாக பாதுகாப்பு கவசங்கள் அணிந்து படகு சவாரி செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள் என்றாா் அவா்.

மாவட்ட சுற்றுலா அலுவலா் ந. நித்திய கல்யாணி, தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழக மண்டல மேலாளா் ஜோமேக்ஸ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.