தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூா் அருகே டிராக்டா் கவிழ்ந்து ஓட்டுநா் உயிரிழந்தாா்.
கோடங்கிபட்டி, காலனி தெருவைச் சோ்ந்த முத்துசாமி மகன் இசக்கிமுத்து (18). இவா் தளவாய்புரத்தைச் சோ்ந்த இசக்கிதுரை என்பவரிடம் டிராக்டா் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்தாா்.
ஞாயிற்றுக்கிழமை உள்ளாா் பகுதியிலுள்ள தென்னந்தோப்பில் டிராக்டா் மூலம் விவசாயப் பணியில் ஈடுபட்டிருந்தாராம். அப்போது, டிராக்டா் திடீரென கவிழ்ந்ததாம்.
இதில், அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.வாசுதேவநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





