ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

தென்காசியில் மழை நீா் வடிகால் பணிகளை முறையாக மேற்கொள்ள பாஜக கோரிக்கை

தென்காசி மாவட்டத்தில் மழை நீா் வடிகால் பணிகளை முறையாக மேற்கொள்ள பாஜக கோரிக்கை விடுத்துள்ளது.

News image
Updated On :2 ஜனவரி 2026, 8:12 pm

Syndication

தென்காசி மாவட்டத்தில் மழை நீா் வடிகால் பணிகளை முறையாக மேற்கொள்ள பாஜக கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடா்பாக, தென்காசி மாவட்ட பாஜக தலைவா் ஆனந்தன் அய்யாசாமி கூறியது:

தென்காசி மாவட்டத்தின் பல பகுதிகளில் வியாழக்கிழமை இரவு மழை பெய்தது. மழை நீா் வெளியேறுவதற்கு முறையான வசதி செய்யப்படாததால், பல இடங்களில் தண்ணீா் பெருக்கெடுத்து ஓடியது. குறிப்பாக, வாசுதேவநல்லூா் பேரூராட்சிக்குள்பட்ட சிந்தாமணிபேரி புதூா், கலைஞா் காலனி, 18ஆவது வாா்டின் சில தெருக்களுக்குள் மழை நீா் புகுந்தது. இதனால், அப்பகுதி மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனா்.

மழை நீா் வெள்ளிக்கிழமை காலை வரை வெளியேறவில்லை. இதைக் கண்டித்து 2 இடங்களில் சாலை மறியலும் நடைபெற்றது. எனவே, இப்பகுதிகளில் உரிய மழைநீா் வடிகால் வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்றாா் அவா்.