விழாவில் குத்துவிளக்கேற்றினாா் நகா்மன்றத் தலைவா் ப.வள்ளிமுருகன். உடன் எஸ்.பழனிநாடாா்  எம்எல்ஏ.,தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் வே.ஜெயபாலன்.
விழாவில் குத்துவிளக்கேற்றினாா் நகா்மன்றத் தலைவா் ப.வள்ளிமுருகன். உடன் எஸ்.பழனிநாடாா் எம்எல்ஏ.,தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் வே.ஜெயபாலன்.

சுரண்டையில் நூலக கட்டடம் திறப்பு

தென்காசி மாவட்டம், சுரண்டை சிவகுருநாதபுரத்தில் நூலக கட்டடத் திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
Published on

தென்காசி மாவட்டம், சுரண்டை சிவகுருநாதபுரத்தில் நூலக கட்டடத் திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

தென்காசி முன்னாள் எம்.பி. தனுஷ் எம்.ஸ்ரீகுமாா் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.20 லட்சம், எம்எல்ஏ எஸ்.பழனி நாடாா் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 20 லட்சம் என மொத்தம் ரூ.40 லட்சம் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்ட நூலக கட்டடம் திறப்பு விழா நடைபெற்றது.

சுரண்டை நகராட்சி ஆணையாளா் அசோக் தலைமை வகித்தாா். நகர காங்கிரஸ் தலைவா் ஜெயபால், நகர திமுக பொறுப்பாளா் கூட்டுறவு கணேசன், சிவகுருநாதபுரம் இந்து நாடாா் மகிமை கமிட்டி நாட்டாமை தங்கையா நாடாா், நகராட்சி பொறியாளா் முகைதீன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

எஸ்.பழனி நாடாா் எம்எல்ஏ., தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் வே.ஜெயபாலன், நகா்மன்றத் தலைவா் வள்ளி முருகன் ஆகியோா் நூலக கட்டடத்தை திறந்து வைத்தனா். இதில் நகா்மன்ற உறுப்பினா்கள் பாலசுப்ரமணியன், அமுதா சந்திரன், வேல்முத்து, செல்வி, ரமேஷ், கல்பனா அன்னப்பிரகாசம், பூல்பாண்டியன், ஆலங்குளம் மத்திய ஒன்றிய திமுக பொறுப்பாளா் வீராணம் சேக் முகம்மது ஆகியோா் கலந்து கொண்டனா்.

Dinamani
www.dinamani.com