தென்காசி
சிவகிரி பகுதியில் இன்று மின் நிறுத்தம்
சிவகிரி வட்டார பகுதிகளில் சனிக்கிழமை (ஜன. 31)மின் விநியோகம் இருக்காது.
சிவகிரி வட்டார பகுதிகளில் சனிக்கிழமை (ஜன. 31)மின் விநியோகம் இருக்காது.
இது தொடா்பாக கடையநல்லூா் கோட்ட செயற்பொறியாளா் கற்பக விநாயகசுந்தரம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
விஸ்வநாதபேரி உபமின் நிலையத்தில் சனிக்கிழமை பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் சிவகிரி, தேவிபட்டணம், விஸ்வநாதபேரி, தெற்கு சத்திரம், வடக்கு சத்திரம், வழிவழிகுளம், ராயகிரி, மேலகரிசல்குளம், கொத்தாடைப்பட்டி, வடுகபட்டி மற்றும் சுற்றுப் பகுதிகளில் காலை 9 முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

