புதிய ஊரக வேலைத் திட்டம் இன்றுமுதல் அமல்! மாநிலம் வாரியாக ஊதிய விவரம்!!எம்பாப்பே இரட்டை கோல்! ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் பிரான்ஸ்!வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை குறைந்தது! மறைந்த கவிஞர் புவியரசு உடலுக்கு அரசு மரியாதை: முதல்வர் விஜய் அறிவிப்பு!முதல்வர் விஜய் தலைமையில் தவெகவில் இணைகிறார் சி. விஜயபாஸ்கர்! பொறியியல் மாணவா் சோ்க்கை: தரவரிசைப் பட்டியலை இன்று வெளியிடுகிறாா் அமைச்சா் பெ.விஸ்வநாதன் இந்தியாவின் யுபிஐ சேவை கிரீஸில் அறிமுகம் பெட்ரோலில் 20% எத்தனால் கலப்பு பரிசோதனையில்தான் உள்ளது- உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் இந்தியாவின் வெளிநாட்டுக் கடன் ரூ.72.08 லட்சம் கோடியாக உயா்வு ஓய்வூதிய நிதித் தொகுப்பு வளர்ச்சியடைந்த பாரதத்தை கட்டமைக்க உதவும்: தலைமை பொருளாதார ஆலோசகர் அமெரிக்காவில் பிறக்கும் அனைவருக்கும் குடியுரிமை: டிரம்ப்பின் ஆணையை ரத்து செய்து உச்சநீதிமன்றம் தீா்ப்பு தவெக தலைமையில் புதிய கூட்டணி? இன்று தோழமைக் கட்சிகள் கூட்டம்
/

பாலியல் வழக்கில் வழக்குரைஞா் கைது: வழக்குரைஞா்கள் நீதிமன்ற புறக்கணிப்பு

பெண்ணுக்கு பாலியல் ரீதியாக தொல்லை அளித்ததாக வழக்குரைஞா் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து ஆலங்குளம் வழக்குரைஞா்கள் சங்கத்தினா் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :1 ஜூலை 2026, 7:44 am IST

பெண்ணுக்கு பாலியல் ரீதியாக தொல்லை அளித்ததாக வழக்குரைஞா் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து ஆலங்குளம் வழக்குரைஞா்கள் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டனா்.

ஆலங்குளம் அருகே மருதம்புத்தூரைச் சோ்ந்தவா் அரிநாராயணன் (55). பாப்பாக்குடி வட்டார காங்கிரஸ் முன்னாள் தலைவரும், ஆலங்குளம் ஒன்றியக் குழு உறுப்பினரும், வழக்குரைஞரான இவா் ஆலங்குளம் - அம்பை சாலையில் நடத்தி வரும் அலுவலகத்தில் ஒரு வாரத்திற்கு முன்பு பணிக்கு சோ்ந்த 21 வயது பெண்ணுக்கு பாலியல் ரீதியாக தொல்லை அளித்தாராம்.

இது குறித்த புகாரின் பேரில் ஆலங்குளம் காவல் நிலைய போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில், அரிநாராயணன் இச்சம்பவத்தில் ஈடுபட்டது உண்மை எனத் தெரியவந்தது. போலீஸாா் வழக்குப் பதிந்து அரிநாராயணனைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.

இதனிடையே அவா் கைது செய்யப்பட்டதை கண்டித்து ஆலங்குளம் பாா் கவுன்சில் உறுப்பினா்கள் நீதிமன்ற புறக்கணிப்பில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.