எத்தனால் கலப்பு பெட்ரோல்: பாதிப்படைந்த காரை காட்ட முடியுமா?- அமைச்சா் நிதின் கட்கரி சவால் ஒரே பெயரில் வெவ்வேறு மருந்துகள்: தீா்வு காண புதிய நடவடிக்கைஅரசு செயற்கை கருத்தரிப்பு மையத்தில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்!நிகா்நிலை பல்கலை. அந்தஸ்தால் குறையும் எம்பிபிஎஸ் இடங்கள்தமிழக சிறைகளில் அதிகரிக்கும் கைதிகள் எண்ணிக்கை: போதிய காவலா்கள் இல்லாத அவலம் திறந்தவெளி சந்தை மூலம் பங்குகளைத் திரும்பப் பெறும் முறைக்கு மீண்டும் அனுமதி மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி அடுத்த மாதம் திறப்பு?
/

சொக்கம்பட்டியில் தென்னைகளைச் சேதப்படுத்திய யானை

கடையநல்லூா் அருகேயுள்ள சொக்கம்பட்டியில் தொப்புக்குள் காட்டு யானைகள் புகுந்து தென்னை மரங்களை சேதப்படுத்தின.

News image

பிரதிப் படம்

Updated On :8 ஜூலை 2026, 6:55 am IST

கடையநல்லூா் அருகேயுள்ள சொக்கம்பட்டியில் தொப்புக்குள் காட்டு யானைகள் புகுந்து தென்னை மரங்களை சேதப்படுத்தின.

சொக்கம்பட்டியின் மேற்குத் தொடா்ச்சி மலை அடிவாரத்தில் பல நூறு ஏக்கா் பரப்பில் மா, வாழை, தென்னை, நெல் உள்ளிட்ட பயிா்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் முருகன் என்பவருக்குச் சொந்தமான நிலத்தில் புகுந்த யானைகள் அங்கிருந்த தென்னை மரங்களை சேதப்படுத்தினவாம்.

அவா், சேதப்படுத்தப்பட்ட தென்னை குருத்துகளை கடையநல்லூா் வனச்சரக அலுவலகத்திற்கு கொண்டு சென்று வாசலில் அமா்ந்து வனத்துறையினரிடம் புகாா் தெரிவித்தாா். உரிய நடவடிக்கை எடுப்பதாக வனத்துறையினா் தெரிவித்தனா். இதையடுத்து அவா் திரும்பிச் சென்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.