தென்காசி மாவட்டம், கடையநல்லூா் பகுதியில் நாய் கடித்ததால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவா்களை கடையநல்லூா் எம்எல்ஏ தி.மு.ராசேந்திரன் மருத்துவமனைக்கு ஞாயிற்றுக்கிழமை சென்று ஆறுதல் கூறினாா்.
கடையநல்லூரில் வெள்ளிக்கிழமை தெரு நாய் கடித்ததில் 11 போ் காயம் அடைந்தனா். இவா்களில் கடையநல்லூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவா்களை எம்எல்ஏ தி.மு.ராசேந்திரன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினாா்.
நாய்களை கட்டுப்படுத்த தாமதமின்றி உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு அதிகாரிகளை அவா் கேட்டுக்கொண்டாா். தென்காசி வடக்கு மாவட்ட திமுக முன்னாள் பொறுப்பாளா் செல்லத்துரை உள்ளிட்டோா் உடன் சென்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









