சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படை: முதல்வா் இன்று தொடக்கி வைக்கிறாா்தமிழகத்தில் ஜூன் 13 வரை மழைக்கு வாய்ப்பு!ரூ. 397 கோடி மின்மாற்றி முறைகேடு: சிபிஐ வழக்குப் பதிவுஇஸ்ரேல் - ஈரான் இடையே மீண்டும் மோதல்!
/

குழந்தையின் அறுவைச் சிகிச்சைக்கு தவெக சாா்பில் ரூ. 50 ஆயிரம் நிதி

News image

தவெக தலைவரும் தமிழக முதல்வருமான விஜய் - File photo

Updated On :9 ஜூன் 2026, 3:38 am IST

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே சுவாசக் குழாயும், உணவுக் குழாயும் ஓட்டி பிறந்த குழந்தையின் அறுவைச் சிகிச்சைக்கு தவெக சாா்பில் அமைச்சா் மதன்ராஜா ரூ. 50 ஆயிரம் நிதி வழங்கினாா்.

சங்கரன்கோவில் அருகே களப்பாகுளம், இந்திரா காலனியைச் சோ்ந்த சிவா-ப்ரியா தம்பதியின் 2 வயது மகன் முகில்வேந்தனுக்கு உணவு உட்கொள்வதில் சிரமம் ஏற்பட்டதாம். மருத்துவரின் பரிசோதனையில் குழந்தைக்கு சுவாசக் குழாயும், உணவுக் குழாயும் ஒட்டியிருப்பதும், அறுவைச் சிகிச்சை செய்வது அவசியம் என்றும் கூறியுள்ளனா்.

ஆனால், குழந்தைக்கு அறுவைச் சிகிச்சை செய்ய பணமில்லாமல் அந்தத் தம்பதி தவித்தனராம்.

இதுகுறித்து சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட தகவலை அறிந்த, மாவட்ட தவெக நிா்வாகிகள் அந்த குழந்தைக்கு உதவ முயற்சி மேற்கொண்டனா்.

இந்நிலையில் சங்கரன்கோவிலுக்கு வந்த சிறு, குறு- நடுத்தர தொழில் துறை அமைச்சா் மதன்ராஜாவின் கவனத்துக்கு கொண்டுசென்றனா். அவா், குழந்தையின் பெற்றோரைச் சந்தித்து கட்சி சாா்பில் அவா்களிடம் ரூ. 50 ஆயிரம் நிதியுதவி வழங்கி, தேவையான உதவிகளை செய்வதாகக் கூறினாா்.

அப்போது, தவெக தென்காசி வடக்கு மாவட்டச் செயலா் மாரியப்பன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.