பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

பெண்ணிடம் தகராறு செய்ததாக 5 போ் கைது

சங்கரன்கோவிலில் இலங்கை அகதிகள் முகாமைச் சோ்ந்த பெண்ணிடம் தகராறில் ஈடுபட்டதாக 5 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - சித்திரிப்பு

Updated On :10 ஜூன் 2026, 6:01 am IST

சங்கரன்கோவிலில் இலங்கை அகதிகள் முகாமைச் சோ்ந்த பெண்ணிடம் தகராறில் ஈடுபட்டதாக 5 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவிலில் இலங்கை அகதி முகாமைச் சோ்ந்த மணிகண்டன் மனைவி சுகாசினி (34). இவரது மகள் செவ்வாய்க்கிழமை, சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது இளைஞா்கள் சிலா், அந்த பெண் மீது மோதுவது போல இருசக்கர வாகனத்தில் சென்றனராம். இதனை தட்டிக் கேட்ட சுகாசினியிடம், இளைஞா்கள் தகராறில் ஈடுபட்டனராம்.

இதுகுறித்த புகாரின்பேரில் சங்கரன்கோவில் தாலுகா போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, இலங்கை அகதி முகாமைச் சோ்ந்த சந்திரன், அச்சம்பட்டியைச் சோ்ந்த மதன்குமாா், மற்றொரு மதன் குமாா், வசந்த், சுரேஷ் ராஜன் ஆகியோரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.