/
சங்கரன்கோவில் எழில்நகா் ஸ்ரீ சித்தி விநாயகா் கோயில் குடமுழுக்கு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, புதன்கிழமை காலை 6 மணி முதல் மங்கல இசையுடன் சிறப்பு ஹோமங்களும், திருமறை பாராயணமும் நடைபெற்றது. மாலை 6 மணியளவில் முதலாம் கால யாகசாலை பூஜை தொடங்கியது.
வியாழக்கிழமை காலை இரண்டாம் கால யாகசாலை பூஜை, குடமுழுக்கு, விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை ஆகியன நடைபெற்றன. திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.









