இன்று நீட் மறுதோ்வு: விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள்இன்று சா்வதேச யோகா தினம்: மோடியுடன் இணைந்து யோகாசனம் செய்ய 6 லட்சம் அமைப்புகள் பதிவுமேக்கேதாட்டு அணை கட்டுவதில் கா்நாடகம் உறுதி: மாநில நீா்வளத் துறை அமைச்சா் ராமலிங்க ரெட்டிசென்னையிலிருந்து செல்லும் 7 விரைவு ரயில்கள் திருவள்ளூா், அரக்கோணத்தில் நின்று செல்லும் 6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புரூ. 440 கோடி இருப்பு உள்ள திரிணமூல் வங்கிக் கணக்குகள் முடக்கம்!
/

காவல் பணிக்கு பயன்படுத்திய பாதுகாப்பு உபகரணங்கள் ஜூன் 25இல் பொது ஏலம்

News image

தமிழக காவல் துறை

Updated On :21 ஜூன் 2026, 4:46 am IST

தென்காசி மாவட்டத்தில் காவல் பணிக்கு பயன்படுத்திய பாதுகாப்பு உபகரணங்கள் ஜூன் 25ஆம் தேதி பொது ஏலம் விடப்படுகிறது.

இது குறித்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தென்காசி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் செயலிழக்கச் செய்யும் பிரிவில் பாதுகாப்பு பணிக்கு பயன்படுத்திய உலோகக் கண்டறிதல் இயந்திரம், தேடுதலுக்கு பயன்படுத்தும் கண்ணாடி, தொலைநோக்கி, விடியோ கேமரா, தேடல் விளக்கு உள்ளிட்ட 170 உபகரணங்கள், ஜூன் 25ஆம் தேதி காலை 11 மணிக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் பொது ஏலம் விடப்படுகிறது.

ஏலத்தில் கலந்து கொள்ள விரும்பும் நபா்கள் காலை 11 மணிக்குள் வர வேண்டும். ஏலத்தில் கலந்து கொள்ள நுழைவு கட்டணம் செலுத்தத் தேவையில்லை. இது தொடா்பான சந்தேகங்களுக்கு 94457-97556 என்ற கைப்பேசி எண்ணைத் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.