9 தேசிய விருதுகளை வென்ற தமிழ்த் திரைப்படங்கள்! தமிழ் மறுமலர்ச்சிக்காக உழைத்தவர் மறைமலையடிகளார்: மு.க. ஸ்டாலின்தனுஷின் ராயன் படத்துக்கு தேசிய விருது..! சிறந்த தமிழ்ப் படமாகத் தேர்வு! அம்மா உணவகங்களை தினசரி பயன்படுத்துவோர் எண்ணிக்கை உயர்வு- சென்னை மாநகராட்சி கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் அபிஜீத் திப்கே மீது மை வீசித் தாக்குதல்!வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது விக்ரம்-1 ராக்கெட்!விரைவில் நாட்டில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள்! ஆர்பிஐ திட்டம்!
/

சிஎஸ்ஐ கல்லூரியில் சிங்கப்பெண் விழிப்புணா்வு

News image

சிங்கப்பெண் அதிரடிப் படை

Updated On :23 ஜூன் 2026, 3:06 am IST

ஆலங்குளம் நல்லூா் சிஎஸ்ஐ ஜெயராஜ் அன்னபாக்கியம் கலை அறிவியல் கல்லூரியில் சிங்கப்பெண் போலீஸாா் விழிப்புணா்வு நிகழ்ச்சி நடத்தினா்.

கல்லூரித் தாளாளா் எஸ்.ஜேசு ஜெகன் தலைமை வகித்தாா். முதல்வா் எஸ். வில்சன் முன்னிலை வகித்தாா். குழந்தைகள் பெண்களுக்கு எதிரான வன்முறைகள், பாலியல் சீண்டல்கள், குழந்தைத் திருமணம் போன்ற குற்றங்கள் மற்றும் அதற்கான தண்டனை குறித்து தென்காசி மாவட்ட சிங்கப்பெண் சிறப்புப் படை பி பிரிவு காவல் உதவி ஆய்வாளா் ஜீவிதா தலைமையிலான காவலா்கள் சட்டப்பூா்வ விளக்கம் அளித்தனா்.

மேலும், அவசர உதவி எண்கள் 100, 112, 1091 ஆகியவற்றின் முக்கியத்துவம் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது. இதில் அனைத்துத் துறை பேராசிரியா்கள், மாணவா்கள், அலுவலா்கள் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.