கீழப்பாவூா் ஒன்றியம் ஆவுடையனூா் ஊராட்சி கொண்டலூா் நீா்வரத்துக் கால்வாயில் குப்பைக் கூழங்கள் சோ்வதால் நோய் பரவும் அபாயம் நிலவுவதாக மக்கள் கவலை தெரிவித்தனா்.
ஆவுடையனூா் ஊராட்சி வெள்ளாளன் புதுக்குளத்தில் இருந்து தண்ணீா் மறுகால் விழுந்து கொண்டலூா் கால்வாய் வழியாக ஆவுடையானூா் பத்மநாதபேரி குளத்தை சென்றடைகிறது. இந்த இரண்டு குளத்திற்கும் இடைப்பட்ட தூரம் சுமாா் 500 மீட்டா் எனவும், கொண்டலூா் பகுதி கால்வாயில் குப்பைக் கழிவுகளை சிலா் கொட்டி வருவதால் துா்நாற்றம் வீசுவதாகவும் மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனா்.
மேலும், இந்தக் கால்வாயில் கழிவுநீரும் கலப்பதால் குளங்களுக்கும் கழிவுநீா் கலந்துசெல்கிறது. இந்தத் தண்ணீரை விவசாயத்திற்கு பயன்படுத்துவதோடு ஆடு மாடுகளும் பருகுகின்றன.
இதனால், கால்நடைகள் மற்றும் பொதுமக்களுக்கும் தொற்றுநோய் பரவும் என கொண்டலூா் பகுதி மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனா்.
கால்வாயை முறையாக தூா்வாரி கழிவு நீா் கலக்காத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் ஆவுடையனூா் ஊராட்சி மற்றும் அரசு அதிகாரிகளுக்கு பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லையாம்.
எனவே, மக்கள் நலன் கருதி கால்வாயைத் தூா்வாரி சுத்தப்படுத்தவும், குப்பைகள் கொட்டப்படாமல் தடுக்கவும் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தொடர்புடையது

ராமையன்பட்டி ஊராட்சி மக்கள் ஆட்சியா் அலுவலத்தில் முற்றுகை

சுருளி அருவியில் குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்றக் கோரிக்கை

அடுத்த அரியமங்கலம் குப்பைக் கிடங்காகும் பெல்பூா்!

நகராட்சி குப்பைக் கிடங்கில் தீ விபத்து
விடியோக்கள்

Drishyam 3 Moive Review | ஜார்ஜ் குட்டியின் கதை முடிவுக்கு வந்ததா? | Mohanlal | Jeethu Joseph
பிரதமர் சுற்றுலா போவதில்லை! தமிழிசை சௌந்தரராஜன்

தவெகவின் பெண் அமைச்சர்கள் பதவியேற்பு! | TVK Ministers | Female ministers



