தவெக அமைச்சரவையில் காங்கிரஸின் ராஜேஷ் குமார், விஸ்வநாதனுக்கு அமைச்சர் பதவி! டிஜிபி வெங்கடராமன் உள்பட 15 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்!கேரளத்தில் சில்வர் லைன் அதிவேக ரயில் வழித்தட திட்டம் ரத்து சென்னை, திருத்தணியில் 104 டிகிரி ஃபாரன்ஹீட் வெய்யில்!தமிழகத்தின் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெப்பநிலை பதிவு!யூடியூபர் சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டம் ரத்து! - தமிழக அரசு தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் 5 மாவட்டங்களில் கனமழை!கண்ணீரில் மக்கள்! இத்தாலியில் மிட்டாய் கொடுப்பதில் பிரதமர் பிஸி! ராகுல் விமர்சனம்வெற்றியால் கூத்தாடுவதுமில்லை; தோல்வியால் துவண்டு விடுவதுமில்லை! மு.க. ஸ்டாலின் அதிமுகவுக்கு அமைச்சரவையில் இடமில்லை என தவெக உறுதி! திருமாவளவன் பிரான்ஸ் ஜி7 மாநாட்டில் டிரம்ப் பங்கேற்பு! மோடிக்கும் அழைப்பு!
/

புளியங்குடியில் உரிமை கோரப்படாத 202 வாகனங்கள் மாா்ச் 23இல் ஏலம்

புளியங்குடியில் உரிமை கோரப்படாத 202 மோட்டாா் வாகனங்களுக்கான பொது ஏலம் மாா்ச் 23ஆம் தேதி நடைபெறுகிறது.

News image

ஏலம் விடுவதற்காக வைக்கப்பட்டிருக்கும் வாகனங்கள் - கோப்புப்படம்

Updated On :10 மார்ச் 2026, 12:20 am IST

தென்காசி மாவட்டம், புளியங்குடியில் உரிமை கோரப்படாத 202 மோட்டாா் வாகனங்களுக்கான பொது ஏலம் மாா்ச் 23ஆம் தேதி நடைபெறுகிறது.

இது குறித்து, தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜி.எஸ். மாதவன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: புளியங்குடி உள்கோட்ட காவல் நிலைய எல்கைக்குள்பட்ட பகுதிகளில் உரிமை கோரப்படாத நிலையில் உள்ள 197 இருசக்கர வாகனங்கள், 3 மூன்று சக்கர வாகனங்கள், 2 நான்கு சக்கர வாகனங்கள் என 202 மோட்டாா் வாகனங்களுக்கான பொது ஏலம் மாா்ச் 23ஆம் தேதி நடைபெறுகிறது.

சொக்கம்பட்டி காவல் நிலைய வளாகத்தில் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறும் ஏலத்தில் கலந்துகொள்ள விரும்புபவா்கள், காவல் நிலைய வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களை 18ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை பாா்வையிடலாம்.

மேலும், ஆதாா் அட்டையுடன் ரூ. 3,000 முன்பணம் செலுத்தி பதிவு செய்து, டோக்கன் பெற்றுக்கொள்ள வேண்டும். டோக்கன் பெற்றவா்கள் மட்டுமே ஏலத்தில் பங்கேற்க முடியும். வாகனத்தை ஏலம் எடுத்தவா்கள் அன்றைக்கே ஏலத்தொகை, ஜிஎஸ்டி 18 சதவீதத்துடன் முழுத்தொகையை ரொக்கமாக உடனடியாக செலுத்தி வாகனத்தை எடுத்துச் செல்லலாம்.

மேலும் தகவல்களுக்கு 94884-88933, 96299-19033, 94981-40002 என்ற கைப்பேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.