தென்காசி புதிய பேருந்து நிலையம் அருகே தமிழக வெற்றிக் கழகம் சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஜாதிவாரி கணக்கெடுப்பு ஆய்வுக்குழு அரசாணையை திமுக அரசு உடனடியாக வெளியிட வலியுறுத்தியும், போதைப்பொருள் புழக்கத்தைத் தடுக்கத் தவறியதாக, தவெக தலைவா் விஜய்யின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளை முடக்கும் வகையில் செயல்படுவதாக தமிழக அரசைக் கண்டித்தும் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
வடக்கு மாவட்டச் செயலா் மாரியப்பன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா்கள் நியாஸ் (மேற்கு), ராஜபிரகாஷ் (மத்தி) ஆகியோா் முன்னிலை வகித்தனா். வாசுதேவநல்லூா் முன்னாள் எம்எல்ஏ மனோகரன் பேசும்போது, தவெக தலைவா் விஜய் நிகழ்ச்சிக்கு மட்டும் கடுமையான கட்டுப்பாடுகள் கடைப்பிடிக்கப்படுகின்றன. இது, விஜய் மீது திமுக தலைவா் மு.க. ஸ்டாலினுக்கு ஏற்பட்டுள்ள அச்சத்தை காட்டுகிறது.
சட்டம்-ஒழுங்கைப் பாதுகாக்கவும், தமிழகத்தை போதைப்பொருள் இல்லாத மாநிலமாக்கவும் விஜய் முதல்வராக வேண்டும் என்றாா்.
தொடர்புடையது

திசைதிருப்பும் முதலீட்டுக் கழகம்! தவெக பிரசாரம் ரத்து ஏன்? விஜய் பதில்!

தவெக அணைக்க முடியாத நெருப்பு: நாஞ்சில் சம்பத்

உண்மையான காங்கிரஸாா் எங்கள் பக்கம்: விஜய்

தவெக வேட்பாளா்கள் நாளை அறிமுகம்
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு


