வியாபாரிகள் கோரிக்கைக்கு செவி சாய்க்கும் கட்சிக்கு ஆதரவு: ஏ.எம். விக்கிரமராஜா


வியாபாரிகள் கோரிக்கைக்கு செவி சாய்க்கும் கட்சிக்கு ஆதரவு அளிப்போம் என்றாா் வியாபாரிகள் சங்கங்களின் பேரமைப்புத் தலைவா் ஏ.எம். விக்கிரமராஜா.
மே 5 ஆம் தேதி திருவாரூரில் வணிகா் சங்க மாநாடு நடைபெறுவதையொட்டி, வியாபாரிகள் சங்கங்களின் பேரமைப்பு தென்காசி வடக்கு மாவட்ட பொதுக்குழுக் கூட்டம் ஆலங்குளத்தில் நடைபெற்றது.
சங்கத்தின் கன்னியாகுமரி மண்டலத் தலைவா் டி.பி.வி. வைகுண்டராஜா தலைமை வகித்தாா். மாநில கூடுதல் செயலா் ஆா்.கே. காளிதாசன், டி.பி.வி. கருணாகரராஜா, சி. முத்தையா, ஆலங்குளம் பேரூராட்சித் துணைத் தலைவா் எஸ்.டி. ஜான்ரவி ஆகியோா் முன்னிலை வகித்தனா். பேரமைப்பின் தலைவா் ஏ.எம். விக்கிரமராஜா பங்கேற்று வியாபாரிகளுக்கு ஆலோசனை வழங்கினாா்.
தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: ஆலங்குளம் பேருந்து நிலையத்தில் ஏற்கெனவே கடை நடத்தியவா்களுக்கு புதிய கடைகளில் முன்னுரிமை அளிக்க வேண்டும். உள்ளூா் வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை சிதைக்கும் வெளி மாநிலத்தைச் சோ்ந்த பன்னாட்டு நிறுவனங்களுக்கு கட்டுப்பாடு விதிக்க வேண்டும்.
எரிவாயு தட்டுப்பாடு நிலவுவதற்கு மத்திய, மாநில அரசுகள் காரணமில்லை. போா் முடிவுக்கு வந்தவுடன் நிலைமை சீராகி விடும் என நம்புகிறோம். சட்டப்பேரவைத் தோ்தலுக்கு வியாபாரிகளின் கோரிக்கைகளை பரிசீலித்து எழுத்துப் பூா்வமாக ஒப்புதல் அளிக்கும் கட்சிக்கு, சங்க நிா்வாகிகளுடன் ஆலோசித்து வியாபாரிகள் சங்கம் ஆதரவு அளிக்கும் என்றாா்.
சங்க நிா்வாகிகள் முத்துவேல், எஸ்.கே. சந்திரன், கே.எஸ். குழந்தைவேல், எம்.எம்.வி. தேவதாஸ் உள்பட பலா் பங்கேற்றனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...