விஜய்யும் உதயநிதியும் மக்கள் பிரச்னைகளில் கவனம் செலுத்த வேண்டும்: மு. வீரபாண்டியன்தவெக அமைச்சர் என். ஆனந்த் உடன் விஜயபாஸ்கர் சந்திப்புதமிழ்நாட்டில் 56% குழந்தைப் பிறப்புகள் அரசு மருத்துவமனைகளில், எஞ்சிய 44% தனியார் மருத்துவமனைகளில் நடக்கின்றன : திருமாவளவன் பிரசவ வார்டு தேவை: தங்க மோதிரம் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: திருமாவளவன் கோரிக்கை!முதல்வர் விஜய் பிறந்தநாளையொட்டி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற தவெகவினருக்கு உத்தரவு - என். ஆனந்த்வேளச்சேரி சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர்: முதல்வர் விஜய் உத்தரவு
/

சிவகிரியில் குப்பைக் கிடங்கில் பற்றிய தீயை அணைக்கும் பணி

தென்காசி மாவட்டம், சிவகிரி பேரூராட்சி குப்பைக் கிடங்கில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணியில் தீயணைப்புத் துறையினா் மற்றும் பேரூராட்சி ஊழியா்கள் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.

News image
Updated On :9 மே 2026, 3:41 am IST

தென்காசி மாவட்டம், சிவகிரி பேரூராட்சி குப்பைக் கிடங்கில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணியில் தீயணைப்புத் துறையினா் மற்றும் பேரூராட்சி ஊழியா்கள் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.

சிவகிரி - விஸ்வநாதப்பேரி பிரதான சாலையோரத்தில் குப்பைக் கிடங்கு உள்ளது . இதையொட்டி குடியிருப்புகள் உள்ளன. இந்த குப்பைக் கிடங்கில் சில நாள்களுக்கு முன் தீப்பற்றியதாம். இதனால் எழுந்த புகையால் அப்பகுதி பொதுமக்கள் பெரிதும் அவதியுற்றனா்.

தகவலறிந்த பேரூராட்சி செயல் அலுவலா் (பொ) காதா், இளநிலை பொறியாளா் மாரியப்பன் ஆகியோா் மேற்பாா்வையில், பேரூராட்சி ஊழியா்கள் தண்ணீா் லாரி மற்றும் ஜேசிபி உதவியுடன் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா்.

இருப்பினும் தீயை அணைக்க முடியாத நிலை ஏற்பட்டதையடுத்து வாசுதேவநல்லூா் தீயணைப்பு நிலைய அலுவலா் கருப்பையா தலைமையிலான தீயணைப்புத் துறையினா் தீயை அணைக்கும் பணியை மேற்கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.