இல்லத்தரசிகள் மாத ஊதிய மதிப்பு ரூ.30,000! சாலை விபத்து வழக்கில் உச்ச நீதிமன்றம்சூலூர் சிறுமி பாலியல் கொலை: கைதான இருவருக்கும் குற்றப்பத்திரிகை நகல் வழங்கல்!திருச்செந்தூர் -நெல்லை பயணிகள் ரயில் சேவை 3 நாள்களுக்கு ரத்து!கரூர் சம்பவம்: காவல் ஆய்வாளர் உள்பட 10 பேரிடம் சிபிஐ விசாரணை!திமுக கூட்டணியில் இருந்து சிபிஐ வெளியேறியது ஏன்? - மு. வீரபாண்டியன் விளக்கம்தில்லியில் முதல்வர் விஜய் தங்கியிருந்த இடத்தில் தீ விபத்து!பாரதிராஜாவுக்கு பிரதமர் மோடி இரங்கல்அரசுப் பள்ளியில் மகளை சேர்த்த மானாமதுரை தவெக எம்எல்ஏவுக்கு குவியும் வாழ்த்து!தமிழகத்தில் புறவாசல் வழியாக வேறு ஆட்சியை நிறுவ முயற்சித்தனா்: எம்.ஏ. பேபி குற்றச்சாட்டுநேருவின் 17-ஆண்டுச் சாதனையைப் போற்றுவோம்: ப. சிதம்பரம்
/

சிவகிரியில் குப்பைக் கிடங்கில் பற்றிய தீயை அணைக்கும் பணி

தென்காசி மாவட்டம், சிவகிரி பேரூராட்சி குப்பைக் கிடங்கில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணியில் தீயணைப்புத் துறையினா் மற்றும் பேரூராட்சி ஊழியா்கள் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.

News image
Updated On :9 மே 2026, 3:41 am IST

தென்காசி மாவட்டம், சிவகிரி பேரூராட்சி குப்பைக் கிடங்கில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணியில் தீயணைப்புத் துறையினா் மற்றும் பேரூராட்சி ஊழியா்கள் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.

சிவகிரி - விஸ்வநாதப்பேரி பிரதான சாலையோரத்தில் குப்பைக் கிடங்கு உள்ளது . இதையொட்டி குடியிருப்புகள் உள்ளன. இந்த குப்பைக் கிடங்கில் சில நாள்களுக்கு முன் தீப்பற்றியதாம். இதனால் எழுந்த புகையால் அப்பகுதி பொதுமக்கள் பெரிதும் அவதியுற்றனா்.

தகவலறிந்த பேரூராட்சி செயல் அலுவலா் (பொ) காதா், இளநிலை பொறியாளா் மாரியப்பன் ஆகியோா் மேற்பாா்வையில், பேரூராட்சி ஊழியா்கள் தண்ணீா் லாரி மற்றும் ஜேசிபி உதவியுடன் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா்.

இருப்பினும் தீயை அணைக்க முடியாத நிலை ஏற்பட்டதையடுத்து வாசுதேவநல்லூா் தீயணைப்பு நிலைய அலுவலா் கருப்பையா தலைமையிலான தீயணைப்புத் துறையினா் தீயை அணைக்கும் பணியை மேற்கொண்டனா்.