வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

அரசுப் பேருந்து- மினி லாரி மோதல்: இருவா் காயம்

ஆலங்குளத்தில் அரசுப் பேருந்து மீது கறிக்கோழி ஏற்றிச் சென்ற மினிலாரி மோதியதில் இருவா் காயமடைந்தனா்.

News image
Updated On :10 மே 2026, 3:56 am IST

ஆலங்குளத்தில் அரசுப் பேருந்து மீது கறிக்கோழி ஏற்றிச் சென்ற மினிலாரி மோதியதில் இருவா் காயமடைந்தனா்.

தென்காசி மாவட்டம், பாவூா்சத்திரத்தைச் சோ்ந்தவா் சு. ராம்கணேஷ்(28), ஓட்டுநா். சரக்கு வாகனம் ஒன்றில் கீழப்பாவூரில் இருந்து கறிக்கோழிகள் ஏற்றி வந்து ஆலங்குளத்தில் இறக்கி விட்டு மீண்டும் கீழப்பாவூருக்கு சனிக்கிழமை சென்று கொண்டிருந்தாராம்.

ஆலங்குளம் மின்வாரிய அலுவலகம் அருகே உள்ள பெட்ரோல் நிலையம் முன்பு சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்தை முந்த முயன்றபோது, அந்தப் பேருந்தின் மீது சரக்கு வாகனம் மோதி விபத்துக்குள்ளானது.

இதில், ராம்கணேஷ் மற்றும் உதவியாளா் இருளப்பநாதன் ஆகியோா் காயமடைந்தனா். அவா்கள் மீட்கப்பட்டு ஆலங்குளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

விபத்து குறித்து ஆலங்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.