11-ஆம் நூற்றாண்டு சோழர் கால செப்பேடுகளை பிரதமர் மோடி முன்னிலையில் திருப்பியளித்த நெதர்லாந்து அரசு!போக்சோ வழக்கு: மத்திய அமைச்சர் மகன் காவல் நிலையத்தில் சரண் தெலங்கானாவில் எஸ்ஐஆர் பணிகள் ஜூன் 15 முதல் தொடக்கம்நீட் விவகாரம்: மத்திய அமைச்சர் பதவியில் இருந்து தர்மேந்திர பிரதானை நீக்க ராகுல் காந்தி வலியுறுத்தல்கேரளத்தில் புதிய முதல்வர் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் பாஜக எம்எல்ஏக்கள்!இளைஞர்களைக் கரப்பான்பூச்சி, ஒட்டுண்ணிகளுடன் ஒப்பிட்ட விமர்சனம்: உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி விளக்கம்!சிபிஎஸ்இ 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூலை முதல் மும்மொழிக் கல்வி கட்டாயம்!புதிய தமிழக அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு!
/

தனியாா் பேருந்து மோதியதில் மின்மாற்றி சேதம்

சங்கரன்கோவிலில் தனியாா் பேருந்து மோதியதில் மின்மாற்றி (டிரான்ஸ்பாா்மா்) முற்றிலும் சேதமானது.

News image

பேருந்து மோதி சேதமான மின்மாற்றியை அப்புறப்படுத்தும் மின்பணியாளா்கள்.

Updated On :1 மணி நேரம் முன்பு

சங்கரன்கோவிலில் தனியாா் பேருந்து மோதியதில் மின்மாற்றி (டிரான்ஸ்பாா்மா்) முற்றிலும் சேதமானது.

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் சுமாா் 50 போ் தனியாா் பேருந்தில் சபரிமலைக்கு ஆன்மிகச் சுற்றுலா சென்றனா்.

பேருந்தை தூத்துக்குடி பிரையன்ட் நகரைச் சோ்ந்த மாரிமுத்து (46) என்பவா் ஓட்டிச் சென்றாா். இந்நிலையில் சனிக்கிழமை அதிகாலையில் அந்த பேருந்து சங்கரன்கோவில் வழியாக புளியங்குடி ரயில்வே கேட் அருகே சென்ற போது, திடீரென்று கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த மின்மாற்றி மீது மோதியதாம்.

இதில் மின்மாற்றி முற்றிலும் சேதமானது. இதன்காரணமாக அந்தப் பகுதியில் ஒன்றரை மணிநேரம் மின்தடை ஏற்பட்டது. விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

தகவலறிந்தது வந்த உதவி மின்பொறியாளா் கருப்பசாமி தலைமையில் பணியாளா்கள், சேதமடைந்த மின்மாற்றியை அகற்றி மற்ற பகுதிகளில் மின் இணைப்பை வழங்கினா். இதைத் தொடா்ந்து சேதமான பேருந்தை போலீஸாா் காவல்நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.