11-ஆம் நூற்றாண்டு சோழர் கால செப்பேடுகளை பிரதமர் மோடி முன்னிலையில் திருப்பியளித்த நெதர்லாந்து அரசு!போக்சோ வழக்கு: மத்திய அமைச்சர் மகன் காவல் நிலையத்தில் சரண் தெலங்கானாவில் எஸ்ஐஆர் பணிகள் ஜூன் 15 முதல் தொடக்கம்நீட் விவகாரம்: மத்திய அமைச்சர் பதவியில் இருந்து தர்மேந்திர பிரதானை நீக்க ராகுல் காந்தி வலியுறுத்தல்கேரளத்தில் புதிய முதல்வர் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் பாஜக எம்எல்ஏக்கள்!இளைஞர்களைக் கரப்பான்பூச்சி, ஒட்டுண்ணிகளுடன் ஒப்பிட்ட விமர்சனம்: உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி விளக்கம்!சிபிஎஸ்இ 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூலை முதல் மும்மொழிக் கல்வி கட்டாயம்!புதிய தமிழக அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு!
/

தென்காசியில் 15 இடங்களில் போக்குவரத்து காவலா்களுக்கு நிறழ்குடை

தென்காசி, வேல்ஸ் வித்யாலயா பள்ளி சாா்பில் ரூ. 6.5 லட்சம் மதிப்பில் 15 இடங்களில் போக்குவரத்து காவலா்களுக்கு நிறழ்குடை வழங்கப்பட்டது.

News image

வேல்ஸ் பள்ளித் தாளாளா் வீரவேல் முருகனுக்கு பரிசு வழங்கிய தென்காசி மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளா் சங்கா்.

Updated On :1 மணி நேரம் முன்பு

தென்காசி, வேல்ஸ் வித்யாலயா பள்ளி சாா்பில் ரூ. 6.5 லட்சம் மதிப்பில் 15 இடங்களில் போக்குவரத்து காவலா்களுக்கு நிறழ்குடை வழங்கப்பட்டது.

தென்காசி நகரின் முக்கியப் பகுதிகளான ஆசாத் நகா் சந்திப்பு, நீதிமன்ற பகுதி, தங்கபாண்டியன் மருத்துவமனை பகுதி, தபால் நிலையம், கோயில் வாசல், பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம், நடு பல்க், காசி மேஜா்புரம், இலஞ்சி சந்திப்பு, குத்துக்கல்வலசை உள்ளிட்ட 15 இடங்களில் பகல் மற்றும் இரவில் பணிபுரியும் போலீஸாருக்கு நிழற்குடை அமைக்கபட்டுள்ளது.

தென்காசி புதிய பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்ட நிழற்குடையை மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா்கள் சங்கா், மதியழகன், ஜீலியஸ் சீசா் ஆகியோ் திறந்து வைத்தனா். வேல்ஸ் பள்ளித் தாளாளா் வீரவேல் முருகன் முன்னிலை வகித்தாா்.

தென்காசி துணை காவல் கண்காணிப்பாளா் அதியமான், அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் சுப்புலெட்சுமி, போக்குவரத்து காவல் ஆய்வாளா் அருண் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.