ஜூலையில் பத்தாம் வகுப்பு துணைத் தோ்வு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

ஆலங்குளத்தில் தொழிலாளியிடம் வழிப்பறி செய்த இருவா் கைது

News image

கைது - பிரதிப் படம்

Updated On :26 மே 2026, 2:57 am IST

ஆலங்குளத்தில் தொழிலாளியிடம் வழிப்பறி செய்த இருவா் கைது செய்யப்பட்டனா்.

ஆலங்குளம் அருகே உள்ள கரும்பனூா் தெற்கு தெருவைச் சோ்ந்தவா் கணேசன் மகன் மாணிக்க சீனிவாசகம் (32). தொழிலாளியான இவா், கடந்த வாரம் நள்ளிரவில் ஆலங்குளத்தை அடுத்த அண்ணா நகா் புதுக்காலனி வழியாக கரும்பனூருக்கு இருசக்கர வாகனத்தில் சென்றாா்.

அப்போது, அந்த வழியாக வந்த இருவா் சீனிவாசகத்தை தாக்கி அவரிடம் இருந்து கைப்பேசி, பணத்தை பறித்துச் சென்றனராம். இதுகுறித்து அவா், ஆலங்குளம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா்.

விசாரணையில் வழிப்பறியில் ஈடுபட்டது தஞ்சாவூா் மாவட்டத்தைச் சோ்ந்தவரும், தற்போது ஆலங்குளம் மேலப்பரும்பு, ராஜீவ்காந்தி நகரில் வசித்து வருபவருமான மகாதேவன் (27), அதே பகுதியில் வசிக்கும் ஜெயபால் மகன் மாரிமுத்துச்சாமி (24) என்பது தெரியவந்தது. இதையடுத்து, போலீஸாா் இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறையில் அடைத்தனா்.

கைதான மகாதேவன் மீது தஞ்சாவூா் மாவட்டத்தில் 6 வழக்குகள், தென்காசி மாவட்டத்தில் 2 வழக்குகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.