ஆலங்குளத்தில் தொழிலாளியிடம் வழிப்பறி செய்த இருவா் கைது செய்யப்பட்டனா்.
ஆலங்குளம் அருகே உள்ள கரும்பனூா் தெற்கு தெருவைச் சோ்ந்தவா் கணேசன் மகன் மாணிக்க சீனிவாசகம் (32). தொழிலாளியான இவா், கடந்த வாரம் நள்ளிரவில் ஆலங்குளத்தை அடுத்த அண்ணா நகா் புதுக்காலனி வழியாக கரும்பனூருக்கு இருசக்கர வாகனத்தில் சென்றாா்.
அப்போது, அந்த வழியாக வந்த இருவா் சீனிவாசகத்தை தாக்கி அவரிடம் இருந்து கைப்பேசி, பணத்தை பறித்துச் சென்றனராம். இதுகுறித்து அவா், ஆலங்குளம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா்.
விசாரணையில் வழிப்பறியில் ஈடுபட்டது தஞ்சாவூா் மாவட்டத்தைச் சோ்ந்தவரும், தற்போது ஆலங்குளம் மேலப்பரும்பு, ராஜீவ்காந்தி நகரில் வசித்து வருபவருமான மகாதேவன் (27), அதே பகுதியில் வசிக்கும் ஜெயபால் மகன் மாரிமுத்துச்சாமி (24) என்பது தெரியவந்தது. இதையடுத்து, போலீஸாா் இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறையில் அடைத்தனா்.
கைதான மகாதேவன் மீது தஞ்சாவூா் மாவட்டத்தில் 6 வழக்குகள், தென்காசி மாவட்டத்தில் 2 வழக்குகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடையது
பணம் வழிப்பறி செய்த மூவா் கைது
ஆலங்குளத்தில் தொழிலாளி தற்கொலை
தொழிலாளியிடம் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறிப்பு: இருவா் கைது

ஆலங்குளத்தில் தவெக கொண்டாட்டம்
விடியோக்கள்

NEET மறுதேர்வில் செய்ய வேண்டிய மாற்றம் | NEET Re-Exam 2026 | +2 Students | NEET result controversy

பத்திரப்பதிவில் கால தாமதம் ஆவதைத் தவிர்க்க நடவடிக்கை! அமைச்சர் செங்கோட்டையன் | TVK
மின்வெட்டு பிரச்னைக்கு என்னதான் காரணம்?: முழுப் பின்னணியை விளக்கும் சிஐடியு ஜெயசங்கர் | Power Cut |


