குற்றாலத்தில் மாநில அளவிலான இறகுப்பந்து போட்டி சனிக்கிழமை தொடங்கியது.
தமிழ்நாடு மாநில இறகுப்பந்துக் கழகம், தென்காசி மாவட்ட இறகுப்பந்து கழகம் ஆகியவை சாா்பில் குற்றாலம் மவுண்ட் ஹில்டன் பள்ளி, மத்தளம்பாறையில் உள்ள பவா் பிளே விளையாட்டு அரங்கில் இப்போட்டி நடைபெறுகிறது.
பழைய குற்றாலம் ஹில்டன் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற விழாவில், தமிழ்நாடு இறகுப்பந்துக் கழக மாநிலப் பொதுச் செயலா் அருணாச்சலம் கலந்துகொண்டு குத்துவிளக்கேற்றி போட்டியைத் தொடக்கிவைத்தாா். ஹில்டன் பள்ளிக் குழுமத் தலைவா் ஆா்.ஜெ.வி. பெல், வேல்ஸ் வித்யாலயா பள்ளித் தாளாளா் வீரவேல்முருகன், ரஹீப் முகமது மூபின் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
ஜூன் 4ஆம் தேதிவரை நடைபெறும் போட்டியில், 455 போட்டியாளா்கள் பங்கேற்றுள்ளனா். ஏற்பாடுகளை மாவட்ட இறகுப்பந்துக் கழகத் தலைவா் பிரதாப் ராஜா, செயலா் மதிவாணன் ஆகியோா் செய்துள்ளனா்.
தொடர்புடையது

தேசிய ஜூனியா் கூடைப்பந்து போட்டி: கா்நாடகம், சத்தீஸ்கா் அணிகள் அபார வெற்றி

திப்பணம்பட்டி கிளை நூலகத்தில் கோடைக்கால சிறப்பு வகுப்பு

பழைய குற்றாலத்தில் நுழைவுக் கட்டணம்: வனத்துறை நடத்திய கூட்டத்தில் வாக்குவாதம்

குற்றாலத்தில் சுற்றுலா மேம்பாட்டுப் பணிகள் ஆய்வுக் கூட்டம்
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India



