ஆண்டிபட்டி அருகே அரைபடிதேவன்பட்டியில் தனியார் பஸ் கவிழ்ந்த விபத்தில், அதில் பயணித்த 37 பேர் காயம் அடைந்தனர்.
செவ்வாய்க்கிழமை இரவு, மதுரையில் இருந்து தேனி நோக்கிச் சென்றது தனியார் பஸ். ஆண்டிபட்டி அருகே அரைபடிதேவன்பட்டியில் சென்று கொண்டிருந்த இந்த பஸ், திடீரென கட்டுப்பாட்டைப் இழந்து, சாலையின் அருகே இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது.
இதில், பஸ்ஸில் பயணம் செய்த 2 வயது குழந்தை வைஷ்ணவி, தேனியைச் சேர்ந்த பொன்னான்டி (40), அதே ஊரைச் சேர்ந்த ரவி (45), அல்லிநகரத்தைச் சேர்ந்த சண்முகம் (55), ஓடைப்பட்டியைச் சேர்ந்த பாப்பாத்தி (40), அதே ஊரைச் சேர்ந்த பத்திரகாளி (42), வேல்ராஜ் (42), செல்வி (32) உள்ளிட்ட 37 பேர் காயம் அடைந்தனர்.
காயமடைந்தவர்களை, 108 ஆம்புலன்ஸ் மூலம் தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இவர்கள் அனைவரும் அங்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது சம்பந்தமாக, க.விலக்கு போலீஸார் வழக்குப் பதிந்து, பஸ் டிரைவர் முத்துக்குமாரை கைது செய்து, விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஜூலை மாத விசேஷ நாள்கள்!

வங்கக்கடலில் ஜூலை 3ல் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு!

வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றி: பொது விடுமுறை அறிவித்த பராகுவே அதிபர்!
பற்களின் ஈறுகளில் ரத்தம் கசிவது ஏன்?
விடியோக்கள்
lingam Web Series Review | தென் தமிழகத்தை நடுங்க வைத்த ரௌடி! லிங்கம் | Lakshmi Saravanakumar

Podcast | அதிமுக இழந்த மேலும் ஒரு எம்எல்ஏ! | News & Views | Epi 48
ஆப்பிரிக்க அணிகளின் எழுச்சி! | FIFA | FIFA World Cup 2026 |


