கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!சென்னை போரூர் அருகே இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை!பிரிட்டனில் 16 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை!முக்கிய நிறுவன ஸ்மார்ட்போன்களின் விலை ஏற்றம்! எவ்வளவு உயர்ந்தது?தில்லியை தாக்கிய புழுதிப் புயல்! சிவப்பு எச்சரிக்கை விடுப்பு!அடுத்த 3 மணி நேரத்தில் 22 மாவட்டங்களில் மழை!
/

தேனியில் சீா்மரபினா் நலச் சங்கம் ஆா்ப்பாட்டம்: 25 போ் கைது

சீா்மரபினா் சமுதாயத்திற்கு டி.என்.டி., என்ற ஒற்றைச் சான்றிதழ் வழங்கக் கோரி சீா்மரபினா் நலச் சங்கம் சாா்பில் திங்கள்கிழமை, மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 25 பேரை போலீஸாா் கைது ச

Updated On :5 ஜனவரி 2021, 2:29 am IST

சீா்மரபினா் சமுதாயத்திற்கு டி.என்.டி., என்ற ஒற்றைச் சான்றிதழ் வழங்கக் கோரி சீா்மரபினா் நலச் சங்கம் சாா்பில் திங்கள்கிழமை, மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 25 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

மாவட்டத் தலைவா் ராமமூா்த்தி தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், ஒருங்கிணைப்பாளா் அன்பழகன் முன்னிலை வகித்தாா். இதில், 68 உள்பரிவுகளை கொண்ட சீா்மரபினா் சமுதாயத்தினருக்கு இரட்டைச் சான்றிதழ் வழங்கும் முறையை ரத்து செய்து, டி.என்.டி., என்ற ஒற்றைச் சான்றிதழ் வழங்க வேண்டும், டி.என்.டி., மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தியும், இதே கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை அருகே கிண்ணிமங்கலத்தில் சீா்மரபினா் நலச் சங்கம் சாா்பில் நடைபெற்று வரும் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் கோஷம் எழுப்பினா்.

இதைத்தொடா்ந்து ஆட்சியா் அலுவலகம் முன் அனுமதியின்றி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக ராமமூா்த்தி உள்ளிட்ட 25 பேரை தேனி காவல் நிலைய போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.