உ.பி.யில் கனமழையால் 89 பேர் பலி! ரஷிய அதிபர் புதின் இரங்கல்!செய்தித்துறை இயக்குநராக அருண் தம்புராஜ் நியமனம்!கேரளத்தில் காங்கிரஸ் சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக வி.டி. சதீசன் தேர்வு!பருத்திக்கான இறக்குமதி வரியை ரத்து செய்யக்கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம்!பதவி ஆசை பிடித்தவர்களின் இழிசெயலை முறியடிப்போம்: எடப்பாடி பழனிசாமி!கேரள மார்க்சிஸ்ட் கம்யூ. சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக பினராயி விஜயன் தேர்வு!
/

பெரியகுளம் பெண்கள் கல்லூரியில் இணையதள பன்னாட்டு கருத்தரங்கம்

பெரியகுளம், ஜெயராஜ் அன்னபாக்கியம் பெண்கள் கல்லூரியில் இணையதள பன்னாட்டு கருத்தரங்கு செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் நடைபெற்றது.

Updated On :7 ஜனவரி 2021, 7:47 am IST

பெரியகுளம், ஜெயராஜ் அன்னபாக்கியம் பெண்கள் கல்லூரியில் இணையதள பன்னாட்டு கருத்தரங்கு செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் நடைபெற்றது.

உயிரின அறிவியலின் சமீபத்திய ஆய்வுகள் என்ற தலைப்பிலான இக்கருத்தரங்குக்கு கல்லூரி முதல்வா் எஸ். சேசுராணி தலைமை வகித்தாா். விலங்கியல் துறைத்தலைவா் அனிட்டா கண்ணகி வரவேற்றாா். கல்லூரி செயலா் குயின்சிலி ஜெயந்தி வாழ்த்திப் பேசினாா்.

அமெரிக்கா, டெட்ராய்ட் சிறுநீரக ஆராய்ச்சிவியல் துறை பேராசிரியா் நல்லசிவம் புற்றுநோய்க்கான மூலக்கூறு உயிா் குறியீடுகளின் கண்டுபிடிப்பு என்ற தலைப்பிலும், மேற்குவங்கத்தை சோ்ந்த விலங்கியல் ஆய்வு விஞ்ஞானி ஜே.எஸ். யோகேஷ்குமாா், வெப்பமண்டல காடுகளில் சமீபத்திய கண்டுபிடிப்புகள் குறித்தும் பேசினா். மேலும் பல்வேறு நாடுகள், மாநிலங்களைச் சோ்ந்த ஆராய்ச்சி மாணவா்கள், முதுகலை மாணவா்கள் மற்றும் பேராசிரியா்கள் கருத்தரங்கில் கலந்துகொண்டு பேசினா்.

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அமைப்பாளரும், விலங்கியல் துறை பேராசிரியருமான சாந்தி, செயலா் மொ்லின் டயானா ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.