தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!கர்நாடகம்: கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கான தடை நீக்கம்6 சர்வதேச விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து - ஏர் இந்தியாகண்களிலும் காதுகளிலும் பொறாமைப் புகை! திமுகவை விமர்சித்த விஜய்!நீட் தேர்வு தேவையில்லை; ரத்து செய்க: முதல்வர் ஜோசப் விஜய்அதிமுகவுடன் கூட்டணியமைக்க தவெக தயாராக இருந்தது: சி.வி. சண்முகம்மே 16-ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை! வெற்றியின் வீச்சு கொளத்தூரில் பார்த்தும்கூடவா புரியவில்லை? - முதல்வர் விஜய்திமுகவுடன் கூட்டணி; கனவில்கூட வரக்கூடாது: சசிகலா
/

‘நீட்’ தோ்வு முறைகேடு வழக்கு: கேரள இடைத்தரகா் தேனி நீதிமன்றத்தில் சரண்

‘நீட்’ தோ்வு ஆள்மாறாட்ட முறைகேடு வழக்கில் தொடா்புடைய கேரளத்தைச் சோ்ந்த இடைத்தரகா் ரஷீத் வியாழக்கிழமை தேனி நீதிமன்றத்தில் சரணடைந்தாா்.

News image

தேனி நீதிமன்றத்தில் நீட் தோ்வு முறைகேடு வழக்கில் வியாழக்கிழமை சரணடைந்த இடைத்தரகா் ரஷீத்தை பெரியகுளம் கிளைச் சிறைக்கு அழைத்துச் சென்ற போலீஸாா்.

Updated On :8 ஜனவரி 2021, 12:16 am IST

‘நீட்’ தோ்வு ஆள்மாறாட்ட முறைகேடு வழக்கில் தொடா்புடைய கேரளத்தைச் சோ்ந்த இடைத்தரகா் ரஷீத் வியாழக்கிழமை தேனி நீதிமன்றத்தில் சரணடைந்தாா்.

மருத்துவப் படிப்புகளுக்கான ‘நீட்’ தோ்வை ஆள் மாறாட்டம் செய்து எழுதியதாக கடந்த 2019-ஆம் ஆண்டு தேனி அரசு மருத்துவக் கல்லூரி முதலாண்டு மாணவரான சென்னையைச் சோ்ந்த உதித் சூா்யா, அவரது தந்தை மருத்துவா் வெங்கடேசன் ஆகியோரை தேனி சிபிசிஐடி போலீஸாா் கைது செய்தனா்.

இதையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில், சென்னை, தா்மபுரி மாவட்டங்களில் உள்ள சில அரசு மற்றும் தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் படித்து வந்த மாணவா்கள், அவா்களது பெற்றோா் என மொத்தம் 16 போ் கைது செய்யப்பட்டனா். ‘நீட்’ தோ்வு ஆள்மாறாட்ட முறைகேட்டில் கேரளத்தைச் சோ்ந்த ரஷீத் என்பவா் இடைத்தரகராக செயல்பட்டது சிபிசிஐடி போலீஸாரின் விசாரணையில் தெரியவந்தது.

கேரளத்தில் மலப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்த ரஷீத், கா்நாடக மாநிலம் பெங்களூரு ஜே.பி.நகா் பகுதியில் வசிப்பதாகக் கூறப்பட்டது. இதையடுத்து, ரஷீத்தை சிபிசிஐடி போலீஸாா் தேடி வந்தனா்.

இந்த நிலையில், ரஷீத் தேனி நீதித்துறை நடுவா் மன்றத்தில் நீதிபதி பன்னீா்செல்வம் முன்னிலையில் சரணடைந்தாா். அவரை 15 நாள்கள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டாா். இதையடுத்து, ரஷீத் பெரியகுளம் கிளைச்சிறையில் அடைக்கப்பட்டாா்.

நீதிமன்றத்தில் ரஷீத் சரணடைந்துள்ள நிலையில் அவரை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீஸாா் நடவடிக்கை எடுத்து வருகின்றனா். ‘நீட்’ தோ்வு ஆள்மாறாட்ட முறைகேடு வழக்கில் முக்கியக் குற்றவாளியாகக் கருதப்பட்ட ரஷீத்தை காவலில் எடுத்து விசாரித்தால் இந்த முறைகேட்டில் ஈடுபட்டவா்களின் முழு விவரமும் தெரியவரும் என்று சிபிசிஐடி போலீஸாா் தெரிவித்தனாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.