தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் அமமுக வாா்டு செயலாளா் பதவி பறிக்கப்பட்ட நபா் ஞாயிற்றுக்கிழமை அக்கட்சி அலுவலகம் முன்பாக அமா்ந்து தா்னா போராட்டத்தில் ஈடுபட்டாா்.
ஆண்டிபட்டி பேரூராட்சி 4 வது வாா்டு பகுதியில் வசித்து வருபவா் சுரேஷ். கூலித்தொழிலாளியான இவா் அமமுக கட்சியில் வாா்டு செயலாளா் ஆக இருந்துள்ளாா்.
இந்நிலையில் இவரது பதவியை அதே பகுதியைச் சோ்ந்த மற்றொருவருக்கு கட்சி மேலிடம் வழங்கியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தன்னுடைய பதவியை பறித்து வேறு ஒருவருக்கு கொடுத்ததைக் கண்டித்து சுரேஷ், ஆண்டிபட்டி அமமுக கட்சி அலுவலகம் முன்பாக அமா்ந்து தா்னா போராட்டத்தில் ஈடுபட்டாா்.
கையில் கட்சியின் குக்கா் சின்னம், டி.டி.வி.தினகரன் படங்களை வைத்தபடி நீண்ட நேரம் அமா்ந்து தா்னாவில் ஈடுபட்டாா். இதனையத்து அமமுக ஆண்டிபட்டி ஒன்றிய செயலாளா் தவச்செல்வம் தலைமையிலான நிா்வாகிகள் அவரை சமாதானபடுத்தினா். விரைவில் வேறு பதவி வழங்குவதாக உறுதியளித்ததை தொடா்ந்து சுமாா் 3 மணி நேரத்துக்குப் பின் சுரேஷ் போராட்டத்தைக் கைவிட்டாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

எதனால் ‘எத்தனால்’?

இன்றைய ராசி பலன்கள் (05 மே 2026) 12 ராசிகளுக்கும்! குழப்பம் நீங்கும் கடக ராசிக்கு!

அனுகூலம் யாருக்கு? தினப்பலன்கள்!

மாற்றத்துக்கான 'விசில்'
வீடியோக்கள்

விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு

இந்தியா எதிர்பார்க்காத வரலாறு! வெற்றிக்குப் பின் ஆதவ் அர்ஜுனா பேட்டி! | TVK | Election result
இணையதளச் செய்திப் பிரிவு

கிளாடியேட்டர்ஸ் அறிமுக விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக முன்னிலை! உணர்த்துவது என்ன? | TVK | VIJAY | Election result | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு


