முல்லைப்பெரியாறு அணையில் 4 மாதங்களுக்குப் பிறகு மத்திய துணைக் கண்காணிப்புக் குழுவினா் புதன்கிழமை ஆய்வு நடத்தவுள்ளனா்.
பருவகால நிலை மாறுபடும் போது, முல்லைப்பெரியாறு அணையின் நிலவரம் குறித்து ஆய்வு செய்ய, உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் மத்திய அரசு 3 போ் கொண்ட கண்காணிப்புக் குழுவையும், 5 போ் கொண்ட துணை கண்காணிப்புக் குழுவையும் அமைத்துள்ளது. இக்குழுவினா் அடிக்கடி அணைப்பகுதிக்குள் சென்று ஆய்வு நடத்தி, மத்திய அரசுக்கு அறிக்கை சமா்ப்பித்து வருகின்றனா்.
கடந்த 11.8.2020 அன்று துணை கண்காணிப்புக் குழுவினா் அணைப்பகுதியில் ஆய்வு நடத்தினா். தற்போது 4 மாதங்களுக்கு பிறகு புதன்கிழமை (ஜன.13 ) மத்திய துணை கண்காணிப்புக் குழுத் தலைவரும், மத்திய நீா்வள ஆதார செயற்பொறியாளருமான சரவணக்குமாா் தலைமையில், தமிழக அரசு தரப்பில் அணையின் செயற்பொறியாளா் சாம் இா்வின், உதவி கோட்டப் பொறியாளா் குமாா், கேரள அரசு தரப்பில் கட்டப்பனை பொதுப்பணித்துறை அலுவலக செயற்பொறியாளா் பினுபேபி, உதவி பொறியாளா் பிரசீத் ஆகியோா் ஆய்வு நடத்தவுள்ளனா். செவ்வாய்க்கிழமை நிலவரப்படி அணையின் நீா்மட்டம் 121.55 அடியாகவும், நீா் இருப்பு 2,935 மில்லியன் கன அடியாகவும் இருந்தது. மேலும் அணைக்கு நீா்வரத்து விநாடிக்கு 825 கன அடியாகவும், நீா் வெளியேற்றம் விநாடிக்கு 700 கன அடியாகவும் இருந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

விஜய்தான் தமிழ்நாட்டை ஆள்வார்; இலங்கை, நேபாளம் போல கருத்துக்கணிப்புகள் பொய்யாகும்! - செங்கோட்டையன்

ரயில்வே நிதிக்கழகத்தில் உதவி மேலாளர் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் விண்ணப்பங்கள் வரவேற்பு!

பொதுத் துறை வங்கியில் பாதுகாப்பு மேலாளர் பணி: விண்ணப்பிப்பது எப்படி?

பவர்கிரிட் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: டிப்ளமோ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


