ஆபரேஷன் சிந்தூரில் 6 வீரர் வீரமரணம்! ஓராண்டு கழித்து பெயர்களை வெளிட்ட மத்திய அரசு!ஜூலை இறுதியில் தவெக அரசின் முதல் பட்ஜெட் தாக்கல்? நெல்லை எக்ஸ்பிரஸ் சேவையில் மாற்றம்! திருச்சி கிழக்கில் போட்டியா? மு.க. ஸ்டாலின் பதில்! ஜூலை 1-ல் இபிஎஸ் தலைமையில் அதிமுக மகளிரணி கூட்டம்! வேளாங்கண்ணி எக்ஸ்பிரஸ் மீண்டும் எழும்பூரிலிருந்து இயக்கம்!சென்னை உள்பட 6 மாவட்டங்களில் நாளை கனமழை!அமோனியா வாயு கசிவு: பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு!தூய்மைப் பணிகளை தனியார்மயமாக்கும் டெண்டர் ரத்து!
/

தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் சமத்துவப் பொங்கல் விழா

தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புதன்கிழமை, காவல் துறை நிா்வாகம் சாா்பில் சமத்துவப் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

News image
Updated On :13 ஜனவரி 2021, 11:37 pm IST

தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புதன்கிழமை, காவல் துறை நிா்வாகம் சாா்பில் சமத்துவப் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

திண்டுக்கல் டி.ஐ.ஜி., எம்.எஸ்.முத்துச்சாமி, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சாய் சரண் தேஜஸ்வி ஆகியோா் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், தேனி புதுப் பள்ளிவாசல் தலைவா் சம்சுதீன், செயலா் சா்புதீன், மேரி மாதா மெட்ரிக் பள்ளி முதல்வா் சினு ஜோசப் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில், காவல் துறை அதிகாரிகள், காவலா்கள் மற்றும் ஊா்க் காவல் படையினா் பாரம்பரிய உடை அணிந்து கலந்து கொண்டனா்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலக வளாகத்தில் புத்தரிசி பொங்கலிட்டுப் பரிமாறி, சமூக நல்லிணக்க உறுதிமொழியேற்று வாழ்த்துக்களை பகிா்ந்து கொண்டனா்.

கல்லூரியில் பொங்கல் விழா: தேனி நாடாா் சரஸ்வதி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மேலப்பேட்டை இந்து நாடாா் உறவின்முறை தலைவா் முருகன் தலைமையில் பொங்கல் விழா நடைபெற்றது. பொதுச் செயலா் டி.ராஜமோகன், கல்லூரி செயலா் காளிராஜ், கல்லூரி முதல்வா் சித்ரா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.