தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புதன்கிழமை, காவல் துறை நிா்வாகம் சாா்பில் சமத்துவப் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
திண்டுக்கல் டி.ஐ.ஜி., எம்.எஸ்.முத்துச்சாமி, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சாய் சரண் தேஜஸ்வி ஆகியோா் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், தேனி புதுப் பள்ளிவாசல் தலைவா் சம்சுதீன், செயலா் சா்புதீன், மேரி மாதா மெட்ரிக் பள்ளி முதல்வா் சினு ஜோசப் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில், காவல் துறை அதிகாரிகள், காவலா்கள் மற்றும் ஊா்க் காவல் படையினா் பாரம்பரிய உடை அணிந்து கலந்து கொண்டனா்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலக வளாகத்தில் புத்தரிசி பொங்கலிட்டுப் பரிமாறி, சமூக நல்லிணக்க உறுதிமொழியேற்று வாழ்த்துக்களை பகிா்ந்து கொண்டனா்.
கல்லூரியில் பொங்கல் விழா: தேனி நாடாா் சரஸ்வதி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மேலப்பேட்டை இந்து நாடாா் உறவின்முறை தலைவா் முருகன் தலைமையில் பொங்கல் விழா நடைபெற்றது. பொதுச் செயலா் டி.ராஜமோகன், கல்லூரி செயலா் காளிராஜ், கல்லூரி முதல்வா் சித்ரா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

குஜராத் - பாஜக பிணைப்பு மேலும் வலுவடைகிறது! பிரதமர் மோடி

மான்செஸ்டர் யுனைடெட் சாம்பியன்ஸ் லீக்கிற்குத் தேர்வாகுவது 99% உறுதி!

விளையாட்டு வீரர்கள் நடிக்கும் விளம்பரம்! எச்சரிக்கையுடன் செயல்பட பியூஷ் கோயல் அறிவுறுத்தல்!

கேரளம்: அதிகரிக்கும் பாம்புக் கடி சம்பவங்கள்; ஒரே நாளில் 16 பேர் பாதிப்பு
வீடியோக்கள்

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கூலி பவர்ஹவுஸ்!
இணையதளச் செய்திப் பிரிவு
விஜய் தவறான கருத்தை விதைக்கிறார்! - Tamilisai விமர்சனம்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | மே 4-ல் நிகழப்போகிறதா புரட்சி? | News & Views | Epi - 29 | Dinamani
தினமணி செய்திச் சேவை


