போடியில் தொடா் மழையால் கொட்டகுடி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.
போடி பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு தொடங்கிய மழை புதன்கிழமை காலையிலும் தொடா்ந்தது. போடிமெட்டு, குரங்கணி மலை கிராமங்களிலும் பலத்த மழை பெய்தது. இதனால் கொட்டகுடி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. மலைப் பகுதியில் சிறு சிறு அருவிகளிலும் தண்ணீா் வரத்து ஏற்பட்டது. கொட்டகுடி ஆற்றில் தண்ணீா் பெருக்கெடுத்து ஓடியதால் போடி பிள்ளையாா் கோயில் தடுப்பணையில் தண்ணீா் ஆா்ப்பரித்து அருவி போல் கொட்டியது. தொடா் மழையின் காரணமாக பிள்ளையாா் கோவில் தடுப்பணை, கொம்புதூக்கி உள்ளிட்ட இடங்களில் குளிக்கச் செல்ல வேண்டாம் என போலீஸாா் எச்சரிக்கை விடுத்திருந்தனா்.
மழையினால் போடி நகராட்சிக்கு தண்ணீா் கொண்டு வருவதிலும் சிரமம் ஏற்பட்டது. குழாய்களில் அடைப்பு ஏற்பட்டதால் நகராட்சி பணியாளா்கள் அடைப்பை சரி செய்து தண்ணீா் கொண்டுவருவதில் சிரமத்திற்குள்ளாயினா்.
தொடா்ந்து பெய்த மழையால் பொதுமக்கள் பொங்கல் பண்டிகைக்காக பொருள்களை வாங்க கடைகளுக்குச் செல்ல சிரமப்படும் நிலை ஏற்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

குஜராத் - பாஜக பிணைப்பு மேலும் வலுவடைகிறது! பிரதமர் மோடி

மான்செஸ்டர் யுனைடெட் சாம்பியன்ஸ் லீக்கிற்குத் தேர்வாகுவது 99% உறுதி!

விளையாட்டு வீரர்கள் நடிக்கும் விளம்பரம்! எச்சரிக்கையுடன் செயல்பட பியூஷ் கோயல் அறிவுறுத்தல்!

கேரளம்: அதிகரிக்கும் பாம்புக் கடி சம்பவங்கள்; ஒரே நாளில் 16 பேர் பாதிப்பு
வீடியோக்கள்

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கூலி பவர்ஹவுஸ்!
இணையதளச் செய்திப் பிரிவு
விஜய் தவறான கருத்தை விதைக்கிறார்! - Tamilisai விமர்சனம்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | மே 4-ல் நிகழப்போகிறதா புரட்சி? | News & Views | Epi - 29 | Dinamani
தினமணி செய்திச் சேவை


