திருநெல்வேலி சந்திப்பு பகுதியில் டிராபிக் ராமசாமிக்கு எதிா்ப்பு தெரிவித்து தூய்மைப் பணியாளா்கள் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
சமூக ஆா்வலரான டிராபிக் ராமசாமி, திருநெல்வேலி சந்திப்பு பகுதியில் தூய்மைப் பணியாளா்கள் ஓட்டி வந்த மாநகராட்சியின் பேட்டரி குப்பை வண்டிகளை தடுத்து நிறுத்தி, அந்த வண்டிகளை உரிய ஆவணங்கள் இல்லாமல் ஓட்டக் கூடாது எனக் கூறினாராம். இதனால், அப்பகுதியில் பணியில் இருந்த தூய்மைப் பணியாளா்கள் இதனைக் கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனா். இதுகுறித்து தகவல் அறிந்த காவல் உதவி ஆணையா் சதீஷ்குமாா், மாநகராட்சி உதவி ஆணையா் ஐயப்பன் ஆகியோா் சம்பவ இடத்துக்கு வந்து சாலை மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சு நடத்தினா். அதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து கலைந்து சென்றனா்.
இதுகுறித்து டிராபிக் ராமசாமி செய்தியாளா்களிடம் கூறியது: திருநெல்வேலி மாநகராட்சியில் உள்ள தூய்மைப் பணியாளா்கள், எந்தவித பதிவும் இல்லாமலும், ஓட்டுநா் உரிமம் இல்லாமலும் பேட்டரி வண்டிகளை ஓட்டி வருகின்றனா். சட்ட விதிகளுக்கு உள்பட்டு அந்த வாகனங்களை இயக்க வேண்டும் என மாநகராட்சி ஆணையா் கண்ணனிடம் வலியுறுத்தி உள்ளேன். இதற்கு அவா் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நீதிமன்றத்தில் வழக்கு தொடருவேன் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

போதைப்பொருள் ஒழிப்பு என்றால் மது கடைகளும் மூடப்படுமா? - ஈ.ஆர்.ஈஸ்வரன் கேள்வி

தமிழ்த் தாய் வாழ்த்து விவகாரம்: தவெக விளக்கம் அளிக்க வேண்டும் - திருமாவளவன்

டி-சேவா மையங்கள் தொடங்குவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

தமிழக மக்களின் விருப்பங்களைப் பிரதிபலித்த தேர்தல்: முதல்வர் விஜய்க்கு மமதா வாழ்த்து!
விடியோக்கள்

தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை

கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை

முதல்வர் விஜய்யைத் தொடர்ந்து பதவியேற்ற அமைச்சர்கள்! | #tvk #tvkvijay #tvkministry
தினமணி செய்திச் சேவை
