தமிழ்நாடு எம்.ஆர்.பி. செவிலியர் மேம்பாட்டுச் சங்கம் சார்பில் பாளையங்கோட்டையில் திங்கள்கிழமை ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
தமிழகத்தில் 6 ஆண்டுகள் பணி நிறைவு செய்த எம்.ஆர்.பி. செவிலியர்களில் 2000 பேர் மட்டுமே காலமுறை ஊதியத்திற்கு ஈர்க்கப்பட்டுள்ளனர். மேலும், 11 ஆயிரத்திற்கு மேலானோர் ஒப்பந்த முறையில் தொடர்ந்து வருகிறார்கள். அவர்களுக்கு பணிப்பாதுகாப்பு வழங்க வேண்டும். எம்.ஆர்.பி. செவிலியர்களுக்கு அரசு ஊழியர்கள் போல சம்பளத்துடன் விடுமுறைகள் அளிக்க வேண்டும்.
நிரந்தர செவிலியர்களுக்கு இணையான ஊதியம், பலன்களை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. பாளையங்கோட்டை சித்த மருத்துவக் கல்லூரி எதிரே உள்ள திடலில் நடைபெற்ற போராட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர்கள் ஆஷா அலிஸ் மாதரசி (திருநெல்வேலி), கலையரசி (தூத்துக்குடி), ஜான் பிரிட்டோ (கன்னியாகுமரி) உள்ளிட்டோர் தலைமை வகித்தனர்.
மாநில துணைத் தலைவர் வெங்கடேசன் தொடக்கவுரையாற்றினார். நிர்வாகிகள் சரஸ்வதி, அனிதாஐசக், கிரிஸ்டல் ஹேப்சி, கார்த்திக், அமுதலட்சுமி உள்பட பலர் கலந்துகொண்டனர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில செயலர் ராஜ்குமார் நிறைவுரையாற்றினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சிலிண்டர் விலை உயர்வு! விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் மே 7-ல் ஆர்ப்பாட்டம்
தோல்விகளால் துவளும் மும்பை இந்தியன்ஸ்! பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதிபெறுமா?

தெலங்கானா: நகைக்கடையில் கொள்ளையர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 4 பேர் காயம்!

விமான நிலையங்கள் பயன்பாட்டில் சென்னை முதலிடம்!
வீடியோக்கள்

நாளை தீர்ப்பு ...யாருக்குச் சாதகம் ? | TN Election Results 2026 | DMK | ADMK | NTK | TVK
தினமணி செய்திச் சேவை

வாக்கு எண்ணிக்கை; TVK சார்பில் வைக்கப்பட்ட வேண்டுகோள்கள்! | Aadhav Arjuna | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

Thiruma திடீர் விடியோ உண்மைப் பின்னணி ! உடைத்துப் பேசும் ரவீந்திரன் துரைசாமி | VCK
இணையதளச் செய்திப் பிரிவு

"விசிகவினர் சிறப்பாக பணியாற்றவில்லை!" திருமா வெளியிட்ட பரபரப்பு விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு


