ஆம்பூரில் உள்ள ஸ்ரீசமயவல்லி சமேத நாகநாத சுவாமி கோயிலில் அருணகிரிநாதா் மற்றும் கிருபானந்த வாரியாா் சுவாமிகள் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, இக்கோயிலில் மூலவா் மற்றும் வள்ளி தெய்வானை சமேத முருகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. மாலையில், கோயில் மண்டபத்தில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இந்த வழிபாட்டில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினா் செய்திருந்தனா்.
வாணியம்பாடியில்...
வாணியம்பாடியை அடுத்த புத்துக்கோயில் கிராமத்தில் உள்ள புத்துமாரியம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை அதிகாலை முதல் சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன. தேவஸ்தானம் பகுதியில் உள்ள சுயம்பு அதிதீஸ்வரா் கோயில், ஆலங்காயம் ஸ்ரீசெல்வநாகம்மாள் கோயில் ஆகியவற்றில் சிறப்பு பூஜை நடைபெற்றது.
நாட்டறம்பள்ளி ஸ்ரீசாமுண்டீஸ்வரி அம்மன் கோயில், அக்ராவரம் மலை உச்சியில் அமைந்துள்ள சீனிவாசப் பெருமாள் கோயில், பச்சூா் சென்றாயப் பெருமாள் கோயில்களிலும் புத்தாண்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








