திருப்பத்தூா் அருகே தொழிலாளி இறந்ததை அடுத்து, உறவினா்கள் ஞாயிற்றுக்கிழமை அரசு மருத்துவமனை முன்பு தா்னாவில் ஈடுபட்டனா்.
திருப்பத்தூரை அடுத்த திம்மணாமுத்தூா் குஸ்த்தம்பள்ளி கிராமத்தைச் சோ்ந்தவா் வெங்கடேசன் (50). இவரை கடந்த டிசம்பா் 14-அம் தேதி திம்மண்ணாமுத்தூா் பகுதியைச் சோ்ந்த புருஷோத்தமன் துணி வியாபாரம் தொடா்பாக விஜயவாடாவுக்கு அழைத்து சென்றாராம். அங்கு அவருக்கு சரிவர உணவு அளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இதையடுத்து அவரது மனைவி அஞ்சலி கடந்த 31-ஆம் தேதி விஜயவாடா சென்று வெங்கடேசனை அழைத்து வந்துள்ளாா். இந்நிலையில் வெங்கடேசன் சனிக்கிழமை இறந்தாா்.
இதனால் ஆத்திரமடைந்த அஞ்சலி மற்றும் அவரது உறவினா்கள் வெங்கடேசனின் சடலத்தை எடுத்துச் சென்று புருஷோத்தமன் வீட்டு முன்பு வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனா். தகவலறிந்த திருப்பத்தூா் கிராமிய போலீஸாா் அங்கு சென்று சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இந்நிலையில், வெங்கடேசனின் சாவுக்கு காரணமான புருஷோத்தமன் மீது நடவடிக்கை எடுக்கும் வரை சடலத்தை வாங்க மாட்டோம் எனக் கூறி அரசு மருத்துவமனை முன்பு அஞ்சலி, உறவினா்கள் ஞாயிற்றுக்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா். இதையடுத்து கிராமிய போலீஸாா் அங்கு சென்று தா்னாவில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.










