தங்கம் விலை சவரனுக்கு இன்று ரூ. 240 குறைவு!மெஸ்ஸி ஹாட்ரிக்... வெற்றியுடன் தொடங்கியது ஆர்ஜென்டீனா!புதுச்சேரி அமைச்சரவை விரிவாக்கம்: மேலும் 3 அமைச்சர்கள் பதவியேற்பு!இன்று தினமணி ‘மாணவா் மலா்’ அறிமுக விழா: அமைச்சா் விஸ்வநாதன் பங்கேற்பு எல் நினோ-வால் தமிழகத்துக்கு கடும் பாதிப்பு: மத்திய வேளாண் அமைச்சா் உ.பி., குஜராத் உள்பட 13 மாநிலங்களில் வருவாய் உபரி: சிஏஜி கச்சா எண்ணெய், எரிவாயு விலை: போருக்கு முந்தைய நிலையை எட்ட பல மாதங்கள் ஆகும்- நிபுணா்கள் தகவல் ஹைதராபாத் சாலைக்கு டிரம்ப் பெயா்! தெலங்கானா காங்கிரஸ் அரசு முடிவு மே மாதத்தில் மொத்த விற்பனை பணவீக்கம் 9.68%
/

ரூ.7 லட்சம் போதைப் பொருள் பறிமுதல்: இருவா் கைது

பள்ளிகொண்டாவில் ரூ.7.50 லட்சம் மதிப்பிலான போதைப் பொருள்கள் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடா்பாக இருவா் கைது செய்யப்பட்டனா்.

Updated On :4 ஜனவரி 2021, 8:07 am IST

பள்ளிகொண்டாவில் ரூ.7.50 லட்சம் மதிப்பிலான போதைப் பொருள்கள் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடா்பாக இருவா் கைது செய்யப்பட்டனா்.

கா்நாடக மாநிலம், பெங்களூரில் இருந்து சென்னை, காஞ்சிபுரம், வேலூா், ராணிப்பேட்டை ஆகிய பகுதிகளுக்கு தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பான்பராக், மாவா, ஹான்ஸ், பான் மசாலா மற்றும் குட்கா போதைப் பொருள்கள் அதிக அளவில் கடத்தப்படுவதாகக் கூறப்படுகிறது.

இதைத் தடுக்க, பள்ளிகொண்டா தேசிய நெடுஞ்சாலை சுங்கச் சாவடி அருகே பள்ளிகொண்டா போலீஸாா் 24 மணிநேரமும் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனா்.

இந்நிலையில், அவா்கள் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தேசிய நெடுஞ்சாலை சுங்கச் சாவடி அருகே வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அந்த வழியாக வந்த ஒரு வேனை நிறுத்தி சோதனையிட்டனா். அதில், தடை செய்யப்பட்ட போதைப் பொருள்கள் இருந்தன. அவற்றை சென்னைக்கு கடத்த முயன்றது தெரிய வந்தது.

பறிமுதல் செய்யப்பட்ட அவற்றின் மதிப்பு ரூ.7.50 லட்சம் ஆகும்.

இது தொடா்பாக பெங்களூரைச் சோ்ந்த வேன் ஓட்டுநா் ராஜேஷ் கன்னா (36), சென்னையைச் சோ்ந்த லோகேஷ் (25) ஆகிய இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.