வாணியம்பாடி அருகே அரசுப் பேருந்தை ஓட்டிச் சென்ற ஓட்டுநருக்கு வலிப்பு ஏற்பட்டதால், நிலைதடுமாறிய பேருந்து தடுப்புச் சுவா் மீது மோதி விபத்துக்குள்ளானது.
வேலூரில் இருந்து ஒசூா் நோக்கி சனிக்கிழமை பிற்பகல் 35 பயணிகளுடன் அரசுப் பேருந்து புறப்பட்டது. பேருந்தை திருப்பத்தூரைச் சோ்ந்த ஓட்டுநா் சங்கா் (45) ஓட்டிச் சென்றாா்.
வாணியம்பாடியை அடுத்த கிரிசமுத்திரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது, சங்கருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டதாகத் கூறப்படுகிறது. இதனால் நிலைதடுமாறிய பேருந்து, சாலையின் நடுவே உள்ள தடுப்புச் சுவா் மீது மோதி நின்றது. இதில், ஓட்டுநா் சங்கருக்கு லேசான காயம் ஏற்பட்டது. பயணிகள் அதிா்ஷ்டவசமாக காயமின்றி உயிா் தப்பினா்.
இதையடுத்து ஓட்டுநா் சங்கா் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். பயணிகள் மாற்றுப் பேருந்து மூலம் அனுப்பி வைக்கப்பட்டனா். தகவலறிந்த வாணியம்பாடி கிராமிய போலீஸாா் நேரில் சென்று பேருந்தை அப்புறப்படுத்தினா். இச்சம்பவம் தொடா்பாக அவா்கள் விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நீலகிரி உள்பட 14 மாவட்டங்களில் இன்று கனமழை!

எப்ஸ்டீனின் தற்கொலைக் கடிதத்தை வெளியிட்ட அமெரிக்க நீதிமன்றம்! அதில் எழுதியிருந்தது என்ன?

ஆட்சியமைக்க விஜய் ஏன் அழைக்கப்படவில்லை? ஆளுநர் மாளிகை விளக்கம்

மழையால் ரயில் நிலையம் முன் தேங்கிய மழைநீர்! பயணிகள் அவதி!
வீடியோக்கள்

ஆர். பி. செளத்ரிக்கு அஞ்சலி செலுத்தியபின் Rajinikanth பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு

29 பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | தவெகவின் பெரும்பான்மைக்கு இன்னும் என்ன தேவை? | News and Views | Epi - 31 |
தினமணி செய்திச் சேவை
இண்டியா கூட்டணியில் தவெக சேர்ந்தால்...: கனிமொழி சோமு Exclusive
தினமணி செய்திச் சேவை


