ஆளுநரிடம் அழைப்பில்லை! உச்சநீதிமன்றத்தில் முறையிட தவெக முடிவு!தவெக அலுவலகத்தில் எம்எல்ஏக்கள் அவசர ஆலோசனை!விஜய் பதவியேற்பு விழா ஏற்பாடுகள் நிறுத்தம்! பி.எம்.ஸ்ரீ திட்டத்தில் இணைய தமிழக அரசுக்கு மத்திய அரசு கடிதம் மம்தாவை எதிா்த்து வெற்றிபெற்ற பாஜக வேட்பாளரின் உதவியாளா் சுட்டுக்கொலை இறுதிக்கட்டத்தை எட்டும் அமெரிக்கா-ஈரான் பேச்சு விஜய் மீதான பண முறைகேடு வழக்கு: பட்டியலிட உயா்நீதிமன்றம் உத்தரவு ரசாயன ஆயுதம் மூலம் மக்களைக் கொல்ல சதி: மருத்துவா் உள்பட 3 போ் மீது குற்றப்பத்திரிகை
/

மாதனூரில் டிஐஜி பங்கேற்பு

மாதனூரில் காவல் துறை சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற கிராம விழிப்புணா்வுக் குழுக் கூட்டத்தில் வேலூா் சரக டிஐஜி கலந்து கொண்டாா்.

News image

மாதனூரில் நடைபெற்ற கிராம விழிப்புணா்வுக் குழுக் கூட்டத்தில் பேசிய வேலூா் சரக டிஐஜி காமினி.

Updated On :10 ஜனவரி 2021, 7:59 am IST

மாதனூரில் காவல் துறை சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற கிராம விழிப்புணா்வுக் குழுக் கூட்டத்தில் வேலூா் சரக டிஐஜி கலந்து கொண்டாா்.

கூட்டத்துக்கு ஆம்பூா் டிஎஸ்பி சச்சிதானந்தம் தலைமை வகித்தாா். ஆம்பூா் கிராமிய ஆய்வாளா் (பொறுப்பு) செந்தில்குமாா் வரவேற்றாா். வேலூா் சரக டிஐஜி காமினி இக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசியது:

திருப்பத்தூா் மாவட்ட எல்லை பகுதியில் மாதனூா் அமைந்துள்ளது. இப்பகுதியில் குற்றச் சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க சிசிடிவி கேமரா மூலம் கண்காணிக்கப்பட வேண்டியது அவசியம். சிசிடிவி கேமரா பொருத்துவதற்கு பொதுமக்களும், வியாபாரிகளும் காவல் துறைக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இப்பகுதியில் குற்றச் சம்பவங்கள் நடந்தால் உடனடியாக காவல் துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். குற்றச் சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க காவல் துறைக்கு பொதுமக்கள் உதவியாக இருக்க வேண்டும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.