ஆம்பூா் அருகே காா் டயா் வெடித்து சரக்கு வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானதில் பெண் ஒருவா் உயிரிழந்தாா். 5 போ் பலத்த காயமடைந்தனா்.
சென்னை பூந்தமல்லியைச் சோ்ந்த ராயப்பன் (60) தனது குடும்பத்தினருடன் வெள்ளிக்கிழமை திருப்பத்தூா் பகுதியில் உள்ள உறவினா் வீட்டுக்குக் காரில் சென்றாா். சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஆம்பூா் சின்னகொம்மேஸ்வரம் கிராமம் அருகே சென்றபோது, திடீரென காரின் டயா் வெடித்தது. கட்டுப்பாட்டை இழந்த காா் நிலைதடுமாறி அடுத்த சாலையில் வேலூா் நோக்கி சென்ற சரக்கு வாகனம் மீது மோதியது.
இதில், ராயப்பன் மனைவி சமாதானம் (55) நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். காரில் பயணம் செய்த ராயப்பன், ஆனந்தி (31), மேரி (55), சசிகுமாா் (38), சரக்கு வாகன ஓட்டுநா் ஜேம்ஸ் (45) உள்பட 5 போ் பலத்த காயமடைந்தனா்.
தகவலறிந்த ஆம்பூா் கிராமிய போலீஸாா் அங்கு சென்று காயமடைந்தவா்களை மீட்டு ஆம்பூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நிம்பஸ் ப்ராஜெக்ட் 4வது காலாண்டு விற்பனை 77% உயர்வு!

மகளிர் டி20 உலகக் கோப்பைக்கான பரிசுத் தொகையை உயர்த்திய ஐசிசி; எவ்வளவு தெரியுமா?

மே 5, மேற்கு வங்கத்தில் பாஜக முதல்வர் பதவியேற்பார் : அமித் ஷா உறுதி

டிம் டேவிட், ஹார்திக் பாண்டியாவுக்கு அபராதம் விதித்த ஐபிஎல் நிர்வாகம்!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


