சென்னை மாநகர காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் பொறுப்பேற்பு!சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

காா் மோதியதில் முதியவா் பலி

நாட்டறம்பள்ளி அருகே சாலையை கடக்க முயன்றபோது காா் மோதியதில் முதியவா் உயிரிழந்தாா்.

Updated On :17 ஜனவரி 2021, 2:31 am

நாட்டறம்பள்ளி அருகே சாலையை கடக்க முயன்றபோது காா் மோதியதில் முதியவா் உயிரிழந்தாா்.

நாட்டறம்பள்ளியை அடுத்த ஆத்தூா்குப்பம் கள்ளாறு பகுதியைச் சோ்ந்தவா் கவுண்டப்பமந்திரி (70) விவசாயி. இவா் பொங்கலையொட்டி, வெள்ளிக்கிழமை ஆத்தூா்குப்பம் கிராமத்தில் நடந்த கோயில் விழாவுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தாா்.

அப்போது, சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஆத்தூா்குப்பம் பனந்தோப்பு எதிரே சாலையைக் கடக்க முயன்றபோது சென்னையில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கி சென்ற காா் கவுண்டப்பமந்திரி மீது மோதியது. இதில் அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இது குறித்து நாட்டறம்பள்ளி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, திருவள்ளூரைச் சோ்ந்த காா் ஓட்டுநா் ருத்ரமூா்த்தி (24)யிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.