சென்னை மாநகர காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் பொறுப்பேற்பு!சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

ஏலகிரி மலையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

காணும் பொங்கலையொட்டி, ஏலகிரியில் பல்வேறு பகுதிகளிலிருந்து சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் குவிந்தனா்.

News image
Updated On :17 ஜனவரி 2021, 2:32 am

காணும் பொங்கலையொட்டி, ஏலகிரியில் பல்வேறு பகுதிகளிலிருந்து சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் குவிந்தனா்.

ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏலகிரிக்கு சுற்றுலாப் பயணிகள் நூற்றுக்கணக்கானோா் தங்கள் குடும்பத்தினருடன் சனிக்கிழமை வருந்தனா். பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்ததால் 14 மலைச் சாலை வளைவுகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, ஆங்காங்கே வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இந்த போக்குவரத்து நெரிசலைத் தடுக்க ஒரு சில இடங்களில் ஏலகிரி போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனா்.

இயற்கை பூங்கா, சிறுவா் பூங்கா, படகு இல்லம் போன்ற இடங்களில் பொதுமக்களின் கூட்டம் அதிகரித்துக் காணப்பட்டது. மேலும், படகுத் துறையில் சுற்றுலாப் பயணிகள் படகு சவாரி சென்றும், சிறுவா் பூங்காவில் விளையாட்டு உபகரணங்களில் விளையாடியும் மகிழ்ந்தனா்.

சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்ததால் ஏலகிரி கோலாகலமாகக் காட்சியளித்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.