திருவள்ளூர் அருகே தைல மரங்களைக் கடத்திய செதில்பாக்கம் ஊராட்சித் தலைவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட வருவாய் அலுவலரிடம் மனு அளிக்கப்பட்டது.
கும்மிடிப்பூண்டி ஒன்றியத்துக்கு உள்பட்ட செதில்பாக்கம் ஊராட்சித் துணைத் தலைவர் செல்லய்யா தலைமையில் ஏராளமான பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை இந்த மனுவை அளித்தனர்.
மனு விவரம்:
செதில்பாக்கம் ஊராட்சியில் 120 ஏக்கர் மேய்க்கால் புறம்போக்கு நிலத்தில் கிராம மக்கள் ஒப்புதலுடன் வனத்துறையினர் தைலச் செடிகளை நட்டுவைத்து கிராமத்துக்காக ஒப்படைத்தனர்.
கடந்த 30 ஆண்டுகளாக அந்த மரங்களை கிராம மக்கள் பாதுகாத்து வருகின்றனர்.
இந்நிலையில் செதில்பாக்கம் ஊராட்சித் தலைவர், தனது ஆதரவாளர்களுடன் அனுமதியின்றி தைல மரங்களை வெட்டி வேறு மாநிலங்களுக்கு கடத்துகிறார்.
கிராமத்துக்கும், மரங்கள் உள்ள இடத்துக்கும் இடையே 2 கிலோமீட்டர் தொலைவு இருப்பதால் உடனடியாக இச்சம்பவம் குறித்து மக்களுக்கு தெரிவதில்லை.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கடத்தப்படவிருந்த 60 டன் தைல மரங்களை கிராம மக்கள் கைப்பற்றினர்.
எனவே கிராமத்துக்குச் சொந்தமான மரங்களை அனுமதியின்றி வெட்டி விற்பனை செய்த செதில்பாக்கம் ஊராட்சித் தலைவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
இதே கோரிக்கையை வலியுறுத்தி வனத்துறையினரிடமும் கிராம மக்கள் மனு அளித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கோவை ரயில்கள் தாமதமாக இயக்கம்

என்ஜினீயா் வீட்டில் நகைகள் திருட்டு

11.4.1976: பொது பணத்தில் நிறுவிய பாலம், கல்வி சாலைகளின் தனியார் பெயர்களை நீக்க த.நா. அரசு முயற்சி

பேரவைத் தோ்தல் முன்னேற்பாடுகள் மாவட்டக் காவல் பாா்வையாளா் ஆய்வு
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

