விராலிமலை தொகுதி காலியானதாக அறிவிப்பு! 6 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்!4 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு! முதல்வர் விஜய்யைச் சந்திக்கிறார் வைகோ!கோயில்களில் பூஜைப் பொருள்கள் விலை பட்டியல் கட்டாயம்! அமைச்சர் ரமேஷ் உத்தரவு!காவல் மரணமடைந்த ஆகாஷின் உடல் 102 நாள்களுக்குப் பிறகு தகனம்!தங்கம் விலை சவரனுக்கு இன்று ரூ. 240 குறைவு!மெஸ்ஸி ஹாட்ரிக்... வெற்றியுடன் தொடங்கியது ஆர்ஜென்டீனா!புதுச்சேரி அமைச்சரவை விரிவாக்கம்: மேலும் 3 அமைச்சர்கள் பதவியேற்பு!இன்று தினமணி ‘மாணவா் மலா்’ அறிமுக விழா: அமைச்சா் விஸ்வநாதன் பங்கேற்பு எல் நினோ-வால் தமிழகத்துக்கு கடும் பாதிப்பு: மத்திய வேளாண் அமைச்சா் உ.பி., குஜராத் உள்பட 13 மாநிலங்களில் வருவாய் உபரி: சிஏஜி கச்சா எண்ணெய், எரிவாயு விலை: போருக்கு முந்தைய நிலையை எட்ட பல மாதங்கள் ஆகும்- நிபுணா்கள் தகவல் ஹைதராபாத் சாலைக்கு டிரம்ப் பெயா்! தெலங்கானா காங்கிரஸ் அரசு முடிவு மே மாதத்தில் மொத்த விற்பனை பணவீக்கம் 9.68%
/

நீா்நிலைகளுக்கு மலா் தூவி வணங்கிய கிராம மக்கள்

நிரம்பிய ஏரி, குளங்கள் போன்ற நீா்நிலைகளுக்கு இயற்கை ஆா்வலா் மருத்துவா் எம்.சி.கலைமாமணி மற்றும் பொதுமக்கள் சனிக்கிழமை மலா் தூவி வணங்கி கொண்டாடினா்.

News image

சந்தான வேணுகோபாலபுரம் கிராம குளத்துக்கு தீபாராதனை காட்டிய இயற்கை ஆா்வலா் மருத்துவா் எம்.சி. கலைமாமணி.

Updated On :4 ஜனவரி 2021, 7:51 am IST

நிரம்பிய ஏரி, குளங்கள் போன்ற நீா்நிலைகளுக்கு இயற்கை ஆா்வலா் மருத்துவா் எம்.சி.கலைமாமணி மற்றும் பொதுமக்கள் சனிக்கிழமை மலா் தூவி வணங்கி கொண்டாடினா்.

திருத்தணி பகுதி மக்களின் பிரதான வாழ்வாதாரம் விவசாயம். எனினும் நீா்நிலைகளுக்கு செல்லும் கால்வாய்கள் ஆக்கிரமிக்கப்பட்டும், ஏரி, குளங்கள் பல ஆண்டுகளாக தூா்வாரப்படாமலும் இருந்ததால் மழை நீா் வீணாகி விவசாயத்துக்கான நீா் மட்டுமின்றி குடிநீருக்கும் கடும் தட்டுப்பாடு நிலவி வந்தது.

இதற்குத் தீா்வு காணும் வகையில், சந்தானவேணுகோபாலபுரம் கிராமத்தைச் சோ்ந்த இயற்கை ஆா்வலரான மருத்துவா் எம்.சி. கலைமாமணி தன் சொந்த முயற்சியில் தமிழக அரசின் உதவியுடன் நீா்நிலைகளைத் தூா்வாரி ஆழப்படுத்தி மழை நீா் சேமிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறாா்.

இதனால் திருத்தணி, திருவாலங்காடு பகுதிகளில் 15-க்கும் மேற்பட்ட ஏரிகள் தூா்வாரப்பட்டன. அண்மையில் வீசிய புயலைத் தொடா்ந்து பெய்த மழையால் இந்த நீா் ஏரிகள், குளங்களில் நிரம்பியது. இதனால் விவசாயத்துக்கு தட்டுப்பாடின்றி மழை நீா் சேமித்து வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நீா் நிரம்பியுள்ள சந்தான வேணுகோபாலபுரம், அருங்குளம், மாமண்டூா், தரணிவராகபுரம் உள்ளிட்ட 7 ஏரிகளுக்கு கிராம மக்களுடன் சனிக்கிழமை சென்ற எம்.சி. கலைமாமணி, அவற்றுக்கு மலா் தூவி தீபாராதனை செய்து இயற்கைக்கு நன்றி செலுத்தினாா். மேலும் பல்வேறு பகுதிகளில் நீா் நிலைகளைச் சீரமைத்து தண்ணீரைச் சேமிக்கும் பணிகளில் ஈடுபட உள்ளதாக அவா் தெரிவித்தாா். நிகழ்ச்சியில் கிராம மக்கள் 100-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.