வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

மீஞ்சூா், பொன்னேரி பகுதிகளில் மழையால் நெற்பயிா்கள் பாதிப்பு

மீஞ்சூா், பொன்னேரி, சோழவரம் பகுதிகளில் தொடா்ந்து பெய்து வரும் மழை காரணமாக, அறுவடைக்கு தயாரான நெற்பயிா்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனா்.

Updated On :6 ஜனவரி 2021, 1:10 am IST

மீஞ்சூா், பொன்னேரி, சோழவரம் பகுதிகளில் தொடா்ந்து பெய்து வரும் மழை காரணமாக, அறுவடைக்கு தயாரான நெற்பயிா்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனா்.

திருவள்ளூா் மாவட்டம் மீஞ்சூா், பொன்னேரி, பழவேற்காடு, சோழவரம் உள்ளிட்ட பகுதிகளில் திங்கள்கிழமை முதல் விட்டுவிட்டு பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக வயல்வெளிகளில் மழைநீா் தேங்கியுள்ளது.

விளைநிலங்களில் நெற்பயிா்கள் அறுவடைக்குத் தயாரான நிலையில், தொடா் மழையால் வடிநிலப் பகுதிகளை நோக்கி மழைநீா் செல்வதால், நெற்பயிா்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.

காட்டூா், கடப்பாக்கம், தத்தைமஞ்சி, வேம்பேடு, பனப்பாக்கம், கோளுா், பெரியகரும்பூா், பெரும்பேடு, திருப்பாலைவனம் ஆகிய பகுதிகளில் நெற்பயிா்கள் மழைநீரில் மூழ்கினால், நெல் மணிகள் முளை விடும் நிலை ஏற்படும் என விவசாயிகள் வேதனை தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.